13 செப்டம்பர் 2011

தமிழர்களே இந்த 127 உயிர்களை காப்பாற்றுங்கள்

அன்புள்ளம் கொண்ட தமிழ் உடன்பிறப்புகளே 

தென் தமிழகத்தை அழிவிலிருந்து காக்கும்பொருட்டு கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி திருநெல்வேலி மாவட்டத்திலே 20 பெண்கள் உட்பட 127 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறோம் .

எங்களுக்கு ஆதவராக தினமும் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் எங்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

நேற்று புரட்ச்சிப்புயல் வைகோ உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டார் .


நாளை செந்தமிழர் சீமான் கலந்துகொள்கிறார் .


எனினும் இன்று எங்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் மூன்று நாட்களை கடக்கின்ற நிலையிலும் தமிழகஅரசு சார்பாகவோ மத்திய அரசு சார்பாகவோ யாரும் எங்களை அணுகவில்லை .

ஒருவேளை அணு உலையை காப்பாற்றுவதற்காக இந்த 127 பேரும் இறந்தாலும் பரவாயில்லை என்றிந்த அரசுகள் நினைக்கிறதோ என்று எண்ணுகிறோம் .


எனவே தமிழுணர்வாளர்கள் அனைவரும் எவ்வாறாவது அரசுக்கு இப்பிரச்சினையை கொண்டு செல்லுமாறு வணக்கத்துடன் கேட்டுக்கொள்கிறேன் .

இப்போராடத்திற்கு ஊக்கமளித்துக் கொண்டிருக்கும் பதிவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி .

உண்ணாவிரத மேடையிலிருந்து கூடல்பாலா .

16 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. நம்ம போராட்டம் வெல்லும் அண்ணா

    பதிலளிநீக்கு
  4. எங்கள் முழு ஆதரவு உங்களுக்கு உண்டு பாலா...
    ரெவரி....

    பதிலளிநீக்கு
  5. அனைத்து ஊடகங்களின் கவனத்தையும் உங்கள் பக்கம் திசை திருப்புவோம்.. விபரீதமாக பரமக்குடி கலவரம் நடந்துள்ளதால் உங்கள் போராட்டம் சென்றடைவதில் சிறு தடங்கல் உள்ளது.. கலங்க வேண்டாம் வலை பதிவுகளிலும் கீச்சு தளத்திலும் தகவல்கள் சத்தம் போட்டு கொண்டு தான் இருக்கின்றன..

    பதிலளிநீக்கு
  6. எங்கள் ஆதரவு எப்போதும் உங்கள் அணிக்கு உண்டு...

    பதிலளிநீக்கு
  7. நன்மைக்கான போராட்டம் என்றும் தோற்றதில்லை.எங்கள் ஆதரவு என்றும் உங்களோடு

    பதிலளிநீக்கு
  8. எனது ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு.

    பதிலளிநீக்கு
  9. சமூக வலைத்தளங்களின் வாயிலாக போராடத்திற்க்கான நமது குரலை எழுப்புவோம்!

    பதிலளிநீக்கு
  10. நன்மைக்கான போராட்டம் என்றும் தோற்றதில்லை.எங்கள் ஆதரவு என்றும் உங்களோடு

    பதிலளிநீக்கு
  11. @koodal kannaநன்மைக்கான போராட்டம் என்றும் தோற்றதில்லை.எங்கள் ஆதரவு என்றும் உங்களோடு

    பதிலளிநீக்கு
  12. கட்டாயமக ஆதரவு தருகிறேன் என்ன செய்ய வண்டும் சொல்லுங்கள்...

    பதிலளிநீக்கு
  13. இப்போதைக்கு என்னால் முடிந்தது இதை பேஸ்புக்கில் பகிர்வது மட்டுமே..

    பதிலளிநீக்கு
  14. உங்கள் போராட்டம் கண்டிப்பாக வெல்லும்

    பதிலளிநீக்கு
  15. பரமக்குடி சம்பவம் எதிர்பாராமல்
    சிறு தடையை உருவாக்கி விட்டது.
    ஆயினும் மனம்தளறோம் நண்பரே.
    தொடர்ந்து பதிவுகளை இடுவோம்....

    பதிலளிநீக்கு
  16. உங்கள் போராட்டம் கண்டிப்பாக வெல்லும்

    பதிலளிநீக்கு