22 ஏப்ரல் 2012

பூமித் தாய்க்கு வணக்கம்!


எத்தனை துன்பம் இழைத்திட்டபோதும் 

பெற்ற தாய் குழந்தைக்கு கொடுமை 

இழைப்பாளோ 

எங்களைப் பெற்றெடுத்த பூமித்தாயே

உன் மைந்தர்கள் உனக்கு 

எவ்வளவு துன்பம் இழைத்திட்டாலும் 

அவர்களுக்கு 

காற்றும் நீரும் உணவும் வழங்கி 

காப்பாற்றி வருகின்றாய் 

உலக பூமி தினமான இன்று 

பூமித் தாயே  உன்னை வணங்குகின்றேன்!

11 கருத்துகள்:

  1. படத்தில் காட்டியது போல் பூமியை சுத்த்ஹம் செய்வதற்கு ஒரு வாய்ப்பிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் ..?

    பதிலளிநீக்கு
  2. ஆக்க முடிலன்னா அழிக்காமலாவது இருப்போமே!

    பதிலளிநீக்கு
  3. தாயைப் போற்றிப் பாதுகாக்கும் பணியில் மனித இனம் தவறி விட்டதா?

    பதிலளிநீக்கு
  4. மேற்கூறிய மூவருடன் இணைந்து...
    ஆம்

    பதிலளிநீக்கு
  5. பொறுமையின் எல்லை பூமித்தாய்.

    பதிலளிநீக்கு
  6. பொறுமையின் சிகரம் அவள்...! அதுதான் நாம் எவ்வளவு சேதம் விளைவித்தாலும் பொறுத்துக்கொண்டே இருக்கிறாள்...

    அவளுக்கு கோபம் வந்தால்...???

    வரகூடாது என்றே வேண்டுவோம்.

    உங்கள் மனதின் ஆழத்தில் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகள், மனதை என்னவோ செய்கிறது பாலா.

    பதிலளிநீக்கு
  7. உலக புவி தினம் இன்றி நன்றியோடு நினைவு கொள்வோம் !

    பதிலளிநீக்கு
  8. அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல! வள்ளுவன் கண்ட உண்மையல்லவா ! சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு