08 மே 2012

இவர்களைக் கொன்று மின்சாரம் தரவேண்டுமா?

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி இன்று 5  வது நாளாக 302  பெண்கள் உட்பட 375  பேர் இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாநிலை மேற்கொண்டுள்ளனர் .

இவர்களில் பலரது உடல் நிலை கவலைக்கிடமாகியுள்ளது.இந்நிலையில் இவர்களின் கோரிக்கையைக் கேட்பதை விட்டுவிட்டு கூடங்குளம் மின்சாரத்திற்கு ஆளாளுக்கு போட்டி போடுகிறார்கள் .

இங்குள்ள மக்களைக் கொன்று எங்களுக்கு மின்சாரம் வேண்டுமென்று கேட்பவர்களுக்கும்  ராஜபக்சேவிற்கும் எந்த வித்தியாசமும்   இல்லை.

நேற்றைய உண்ணாவிரத காட்சிகள் கீழே.













6 கருத்துகள்:

  1. கரடியாய் கத்தியும் கொஞ்சமும் அசையாத அரசை சாபம் போட்டுதான் கொல்ல வேண்டும் போல கொய்யால அரசு!!!!!!

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு படமும் நெஞ்சை விம்ம வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா10:49 AM, மே 08, 2012

    இந்த அகிம்சைப் போராட்டத்திற்கு மதிப்பில்லாவிட்டால் போராட்டம் வேறு மாதிரியாகிவ்டும் அரசு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்

    பதிலளிநீக்கு
  4. செவிடண் காதில் ஊதிய சங்கே!
    மாநில, மத்திய அரசுகள் கேட்காது
    படங்கள் அனைத்தும் நெஞ்சைப்பதற
    வைக்கின்றன!கண்ணை விற்று சித்திரம் வாங்கும் கயமைக்குணம் மாறாது
    மக்களையாவது காப்பாற்றுவோம்!
    முயலுங்கள் பாலா!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  5. கிடைக்கும் காற்றாலை மின்சாரத்தை சேமிக்க வக்கற்ற அரசாங்கம், மக்கள் உயிரோடு விளையாடுகிறது.

    பதிலளிநீக்கு
  6. அணுஉலைக்கு எதிரான அறப்போராட்டம் வெல்லட்டும். அந்த தாய்மார்களின் உடல்நிலை மேம்பட இறைவனைப் பணிகிறேன். பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு