27 மார்ச் 2011

கூடங்குளம் அணு உலை மூடக் கோரி மக்கள் போராட்டம் .





    ஜப்பானில் கடந்த 11-3-2011 அன்று ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் சுனாமியைஅடுத்து அங்கு பேரழிவு ஏற்பட்டது .ஜப்பான் மக்களுக்கு சுனாமி என்பது புதிதான ஒன்று அல்ல .ஆனாலும் இந்த முறை சுனாமியின் தாக்குதல் மிகவும் கோரமாகவே இருந்தது .இந்நிலையில் அவர்கள் சற்றும் எதிர் பார்க்காத ஒரு பேராபத்து ஒன்று வந்தது .அதுதான் அங்குள்ள அணு உலைகளில் ஏற்பட்ட விபத்து .கதிரியக்க பாதிப்பால் அப்பகுதில் இருந்து 30 கிலோமீட்டர் சுற்றளவிலுள்ள மக்கள் உடனடியாக அப்புறப் படுத்தப் பட்டுள்ளனர் .அதோடில்லாமல் 240 கிலோமீட்டர் தொலைவிலுள்ள டோக்யோ நகரத்திலும் குடிநீரில் கதிரியக்கம் உள்ளதால் ஜப்பான் அரசாங்கமும் மக்களும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்பிற்குள்ளாகி வருகின்றனர் .இதன் தாக்கம் தற்போது இந்தியாவிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது .இரண்டு நாட்களுக்கு முன் டில்லி மற்றும் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதிகளில் மக்கள் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தினர் .கூடங்குளத்தில் ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் கடற்கரையில் இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு விரைவில் செயல் படத் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . ஆனால் கூடங்குளம் பகுதியில் அணுஉலை விபத்து நேர பாதுகாப்பு ஒத்திகை இது வரை நடத்தப்படவில்லை .காரணம் இங்குள்ள ஜனத்தொகை .ஒத்திகை
நடத்தப்படவேண்டிய20kmபகுதிக்குள்2லட்சத்திற்கும்அதிகமானோர்வசிக்கின்ற
னர்.இவர்களை எப்படி அப்புறப்படுத்துவது அப்படியே அப்புறப்படுத்தினாலும் எப்படி அவர்களை பேணுவது என்று மாவட்ட நிர்வாகம் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது .இதன் காரணமாக இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அணுமின் நிலையம் குறித்து மிகவும் அச்சமடைந்துள்ளனர் .எனவே கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு பதிலாக அவ்விடத்தில் சுற்றுசூழலுக்கு பாதிப்பு நேராத வகையில் வேறு மின் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர் .இதற்காக 26 -03 -2011 அன்று கூடங்குளம் பகுதி மக்கள் சுமார் 1000 பேர் ஜப்பான் மக்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு கூடங்குளம் அணுமின்திட்டத்தை நிறுத்தவேண்டும் என்று மௌன ஊர்வலம் சென்றனர் .கடந்த 23 -03 -2011 அன்று கூடங்குளம் அணுமின் திட்ட இயக்குனர் மக்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்கவேண்டும் என்று கூடங்குளம் பகுதி மக்கள் 50 பேருக்கு பிரியாணி விருந்து அளித்தார் .ஆனால் மக்கள் அதை கண்டுகொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டது அணுமின் நிலைய நிர்வாகத்தை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது .  

1 கருத்து:

James சொன்னது…

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. கூனி மீனால் பெரிய கப்பலை தடுக்க முடிந்தால் நம்மால் முடியாதா?