14 அக்டோபர் 2011

அணு உலைப் பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

கூடங்குளம் அணு உலை தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று கூறி கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார  ஊர்களில் வசிக்கும் மக்கள் கடந்த ஒரு மாதமாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் .

தமிழக அரசும் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து மக்கள் அச்சம் தீரும் வரை அணு உலைப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது .எனினும் மத்திய அரசு அதை கண்டுகொள்ளாமல் அணு உலையை செயல்பட வைக்க முனைப்பு  காட்டி வந்தது .

இந்நிலையில் இன்று திடீரென மக்கள்  வெகுண்டெழுந்து அணு உலைப் பணிகளை இனி தாங்களே நிறுத்துவது என முடிவெடுத்தனர் .
 

6 கருத்துகள்:

  1. நம் வாழ்வும் பாதுகாப்பும் நம் கையில்தான் உள்ளது.

    பதிலளிநீக்கு
  2. உங்களின் இந்த பணி மற்றும் தொடர்ச்சியான போராட்டத்துக்கும் ஏன் வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  3. ஒன்றும் சொல்வதற்கு இல்லை

    பதிலளிநீக்கு
  4. சாது மிரண்டால் காடு கொள்ளாது..
    இவர்களுக்கென்ன தெரியும் என்று
    சாக்குபோக்கு சொல்லி சமாளித்து வந்தவர்களை
    துண்டுபோட மக்கள் கொந்தளித்தால்..
    தாங்காது நாடு.

    காவுவாங்க காத்திருக்கும் அணுவுலை அரக்கனை
    கருவிலே அறுத்தெறிய வேண்டும்.

    போராட்டம் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. பாமரத் தொழிலாளர்களின்
    மனதில் உதித்த அணுவுலை பாதிப்பை
    இங்கே கவிதையாக்கி இருக்கிறேன் நண்பரே..
    நேரம் கிடைக்கையில் பாருங்கள்.

    http://ilavenirkaalam.blogspot.com/2011/10/blog-post_14.html

    பதிலளிநீக்கு
  6. சாது மிரண்டால் காடு கொள்ளாது..
    இவர்களுக்கென்ன தெரியும் என்று
    சாக்குபோக்கு சொல்லி சமாளித்து வந்தவர்களை
    துண்டுபோட மக்கள் கொந்தளித்தால்..
    தாங்காது நாடு.

    காவுவாங்க காத்திருக்கும் அணுவுலை அரக்கனை
    கருவிலே அறுத்தெறிய வேண்டும்.

    பதிலளிநீக்கு