17 நவம்பர் 2010

இந்தியா வல்லரசாயிடுச்சி

இது என்ன புதுசா ? இங்கிலிஷ்காரன் படத்தில் ஒரு காமெடி பார்த்திருப்பீர்களே அது போலத்தான் இதுவும் .  

சத்யராஜ் திருமணத்தை நிறுத்த வடிவேல் & கோ தீவிரமாக திட்டம் தீட்டுவார்கள் . இதனிடையே போண்டாமணி திடீரென்று வடிவேலிடம் திருமணத்தை தான் நிறுத்திவிட்டதாக கூறுவார் . எப்புடிடா என்று வடிவேலு வினவ மாப்பிள்ளையோட சீப்பை தான் எடுத்துவந்துவிட்டதாகவும் இனிமேல் அவரால் தாலி கட்ட முடியாது எனவும் கூறி வடிவேலுவிடம் பரிசு? வாங்குவார் .

அதுபோலத்தான் இந்தியாவில் உள்ள சிலரும் ஒரு சில துறைகளில் படைத்துள்ள சாதனைகளை வைத்துகொண்டு ஏதோ இந்தியா வல்லரசாகிவிட்டதை போல தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள்

உள்ளூர் விளையாட்டு போட்டிகளில் சாதிபவர்களால் ஒலிம்பிக்கிலோ ஏன் ஆசிய விளையாட்டு போட்டிகளில்கூட சாதிக்க முடியவில்லை நா பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் பிடிக்க அமெரிக்காவிடம் உதவி கேட்கிறது ஆனால் பாகிஸ்தானிடம் இருந்து இந்தியாவை பாதுகாக்க உதவி கேட்க இயலவில்லை .  

பொருளாதாரத்தில் வல்லரசாகி வருகிறோம் என்று கூறுவார்கள் ஆனால் உள்நாட்டில் நடக்கும் ஊழல்களுக்கு உதவி செய்வார்கள் . 

இப்படி பட்டவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டால் அடுத்த நிமிடமே இந்தியா வல்லரசாகிவிட்டது என்று நாம் கொண்டாடலாம் .