13 நவம்பர் 2011

கூடங்குளம் பிரச்சினை :முன்னாள் மத்திய அமைச்சர் பல்டி !

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக சில மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன .கடந்த செப்டம்பர் மாதத்தில் 12 நாட்கள் தொடர்ந்து  கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்றது .அதில் பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர் .

அவ்வமயம் கலந்துகொண்ட தலைவர்களில் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் .இவர் கூடங்குளம் அமைந்திருந்த திருச்செந்தூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதுதான் 1988  ல் இத்திட்டம் துவங்கப் பட்டது .

போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திரு தனுஷ்கோடி ஆதித்தன் தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதுதான் இத்திட்டம் துவங்கப் பட்டதாகவும் இத்திட்டத்தின் தீமைகள் அப்போது தனக்கு தெரியாது எனவும் குறிப்பிட்டார் .


இடிந்தகரை போராட்டத்தில் தனுஷ்கோடி ஆதித்தன் 

கடந்த செப்டம்பர் 14  ம் தேதி இவ்வாறு கூறிய அவர் இரு தினங்களுக்கு முன் கூடங்குளம் அணு மின் நிலையம் தமிழ் நாட்டிற்கு மிகவும் அவசியம் என்று கூறியுள்ளார் .

இது போலத்தான் பாரதீய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் திரு சரவணாபெருமாள் இடிந்தகரை போராட்டத்தில் கலந்துகொண்டார் .ஆனால் இக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன் ராதா கிருஷ்ணன் அணு மின் நிலையம் தேவை என்கிறார் .

இது போல இரட்டை வேடம் போடும் தலைவர்களிடமும் கட்சிகளிடமும் மக்கள் எச்சரிக்கையாக நடந்துகொள்ளவேண்டும் .

04 நவம்பர் 2011

கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவாக பிரபல விஞ்ஞானிகள் !

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி தொடர் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன .இந்நிலையில் சில நாட்களுக்கு முன் மத்திய அரசு போராட்டக் குழு மற்றும் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்த 15  பேர் கொண்ட குழுவை அமைத்தது .

அதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 6  பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டது .

இந்நிலையில் தற்போது அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு சார்பாக 21 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப் பட்டுள்ளது .இக்குழுவில் பிரபல விஞ்ஞானிகளும் இடம் பெற்றுள்ளனர் .போராட்டக் குழு சார்பில் அமைக்கப் பட்டுள்ள நிபுணர் குழு விபரம்.


1)திரு புத்தி கோட்டா சுப்பாராவ் (அணு சக்தி பொறியாளர்  மற்றும் இந்திய கப்பல் படை முன்னாள் கேப்டன் )

2)திரு பரமேஸ்வரன்(இந்தியாவின் முதல் அணுசக்தி விஞ்ஞானி )

3)திரு சிவாஜி ராவ் (விசாகப்பட்டினம் பல்கலைக் கழக சுற்றுசூழல் மைய  இயக்குனர் )

4)திரு பத்மநாபன் (கதிர் வீச்சு ஆபத்து குறித்த ஐரோப்பிய கமிட்டி உறுப்பினர் )

5)திரு அருணாச்சலம் (நெல்லை பல்கலை கழக பரமகல்யாணி சுற்றுசூழல் அறிவியல் ஆய்வு மைய  தலைவர் )

6)திருமதி சவும்யா  தத்தா (இந்திராகாந்தி சுற்றுசூழல் ஆய்வு மைய முன்னாள் தலைவர்)

7)திரு மெகர் எஞ்சினியர் (அறிவியல் ஆராய்ச்சியாளர் மற்றும் இயற்பியல் வல்லுநர் )

8)திரு சுரேந்திரா கடேகர் (அணு சம்மந்தமான எழுத்தாளர்)

9)திரு அஜ்மல்கான் (அண்ணாமலை பல்கலை கழக கடல்சார் உயிரியல் துறை பேராசிரியர் )

10)திரு லால் மோகன் (இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய  முதுநிலை விஞ்ஞானி)

11)டாக்டர் புகழேந்தி (கல்பாக்கம் சுற்றுசூழல் ஆராய்ச்சி மேற்கொண்டவர்)

12)டாக்டர் ரமேஷ்(கூடங்குளம் புவி அமைப்பு ஆராச்சியாளர்)

13)திரு அனுமந்த  ராவ் (தமிழ்நாடு  மின்சார வாரிய  ஒழுங்குமுறை ஆணைய முன்னாள் உறுப்பினர்)

14)திரு லஜபதி  ராய் (மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் )

15)திரு சுக்லாசென்  (கொல்கத்தா பிரபல பொறியாளர்)

16)திரு சிவக்குமார்(சென்னை பிரேசிடன்சி கல்லூரி முன்னாள் இயற்பியல் துறை தலைவர் )

17)திரு ஜேக்கப் ஜான் (பொருளியல் வல்லுநர்)


18)திரு சர்மா (முன்னாள் இந்திய நிதித்துறை செயலாளர் )

மற்றும்  மூன்று பேர்

இவர்கள் அனைவரும் இணைந்து கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையை முழுமையாக ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை தரவுள்ளனர் .

தமிழகத்தின் சுற்றுலா தலங்களின் முழு விபரம் அறிய ஒரு தளம் !

அனைவருக்கும் மனதை மகிழ வைப்பதிலும்  மன அழுத்தத்தை குறைக்க வைப்பதிலும் சுற்றுலா தலங்கள் முக்கிய  பங்கு வகிப்பதை மறுக்க முடியாது. அதே வேளையில் ஓர்  இன்பமான சுற்றுலா அனுபவம் கிடைக்க சிறந்த சுற்றுலா வழி காட்டுதல் அவசியம் .


இக்குறையை போக்கி வருவதுதான்  தமிழக சுற்றுலா துறையின் இணைய தளம் .

இத்தளத்தில் தமிழகத்தில்  ஒவ்வொரு  மாவட்டத்திலுமுள்ள முக்கிய வழிபாட்டு தலங்கள் ,பூங்காக்கள்,  நினைவிடங்கள்,கடற்கரைகள் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்கள்  பற்றிய முழு விபரமும் உள்ளது .

தமிழ் நாடு சுற்றுலா வழிகாட்டுதலுக்கு இதைவிட சிறந்த தளங்கள் இல்லை எனலாம் .

தமிழக சுற்றுலா துறையின் தளத்திற்கு செல்ல இங்கே சுட்டவும்.

03 நவம்பர் 2011

மடி கணினிக்கு பயனுள்ள ஒரு இலவச மென்பொருள் !

BatteryInfoView .

இது ஒரு இலவச மென்பொருள் .இது மடி கணினிகளுக்காக உருவாக்கப்பட்டது. இதை மடி கணினியில் நிறுவி இயக்கினால் மடி கணினியில் பொருத்தப் பட்டிருக்கும் பேட்டரி குறித்த அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்ள முடியும் .


மடி கணினியை தயாரித்த நிறுவனம் சீரியல்  நம்பர் போன்றவற்றை அறியலாம் அத்தோடு  பேட்டரியில் எத்தனை சதவீதம் சக்தி காலியாகியுள்ளது இன்னும் எவ்வளவு நேரம் நீடிக்கும் போன்ற விபரங்களை அறிந்து கொள்ள முடியும் .மிகவும் பயனுள்ள இம்மென்பொருளின் அளவு மிகச்சிறியது. 

02 நவம்பர் 2011

உங்கள் பிளாக் வெவ்வேறு கணினி திரைகளில் எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதை அறியவேண்டுமா?

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நமக்குப் பிடித்த  முறையில் நம் வலைப்பூவை வடிவமைப்போம் .வடிவமைக்கும்போது அது நமது கணினி திரையில் எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதை மட்டுமே நாம்  அறிந்திருப்போம் .ஆனால் வெவ்வேறு ரெசொலூஷன் கொண்ட கணினித் திரைகளில் அது எப்படி தோற்றமளிக்கும் என்பதை நாம் அறிந்திருக்க மாட்டோம் .


உதாரணமாக நமது கணினி திரையின் ரெசொலூஷன் 1600 x900  என்று வைத்துக் கொள்வோம் நமது பிளாக் 800x600  ரெசொலூஷன் கொண்ட கணினி திரையில் எப்படி தோற்றமளிக்கும் என்பதை நாம் அறிய முடியாது .அதை நாம் அறிந்துகொண்டால் அதற்கேற்ற முறையில் நமது வலைப்பூவை வடிவமைக்கலாம் .

http://resolutiontester.com/ இந்த தளத்திற்கு சென்று நமது வலைப்பூ முகவரியைக் கொடுத்தால் வெவ்வேறு ரெசொலூஷன்களில் நமது வலைப்பூ எவ்வாறு தோற்றமளிக்கும் என்பதை அறிந்துகொள்ளலாம் .

பொதுவாக தற்போது உபயோகத்தில் உள்ள 95  சதவீத கணினி திரைகள் 1024x768  மற்றும் அதற்கு அதிகமான ரேசொலூஷனை கொண்டுள்ளன. இதற்கேற்ற முறையில்  நமது வலைப்பூ இருந்தால் அது வாசகர்களை கவரும் விதத்தில் அமையும் .