22 ஏப்ரல் 2012
07 ஏப்ரல் 2012
நோயின்றி உற்சாகமாய் வாழ உடற்பயிற்சிகள் -மின்னூல்
சுவரின்றி சித்திரமில்லை என்பது முதுமொழி.Sound mind in a sound body
என்பது ஆங்கிலப் பழமொழி.உடல் நிலை சரியாக இருந்தால்தான் உள்ளம் தெளிவாக
இருக்கும்.அவ்வாறிருந்தால்தான் நாம் வாழ்க்கையில் இலக்குகளை எளிதில் எட்ட
முடியும்.உடலை நோயின்றி எப்போதும் இளமையுடன் வைத்துக்கொள்ள பல்வேறு வழிகள்
உள்ளன.இவற்றில் தலையாயது உடற்பயிற்சி என்று சொன்னால் மிகையாகாது.
தத்துவ
ஞானி வேதாத்திரி மகரிஷியைப் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள்.உலக மக்கள்
அமைதியாக வாழ 1958 ல் சமுதாய சேவா சங்கம் என்ற ஒரு அமைப்பை
ஏற்படுத்தியவர்.இன்று அவ்வமைப்பு பல கிளைகளுடன் தொடர்ந்து வளர்ந்து
வருகிறது.வேதாத்திரி மகரிஷி 90 வயதைக் கடந்தபின்பும் ஒரு இளைஞனைப் போல்
சுறு சுறுப்பாக இருந்தவர் . அவர் சமூக நன்மை கருதி நீண்ட ஆராய்ச்சிக்குப்
பின் சில உடற்பயிற்சி முறைகளை அறிமுகப் படுத்தினார்.
இவ்வுடற்பயிற்சிகள்
செய்வதற்கு எளிதாகவும் அதே வேளையில் மிகுந்த பயனளிப்பவையாகவும் உள்ளன
.நீங்களும் இவ்வுடற்பயிற்சிகளை செய்து வாழ்வில் வளம் பெறுங்கள் .
வாழ்க
வளமுடன்!
05 ஏப்ரல் 2012
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே ....
அன்பின் உறைவிடமாய் இருந்து இன்றும் புதுவையில் ஆத்ம ஒளி வீசிக்கொண்டிருக்கும் ஸ்ரீ அன்னையை வேண்டி கங்கை அமரன் அவர்கள் இசையமைத்து பாடிய பாடல் இது .எத்தனை முறை கேட்டாலும் நெஞ்சை வருடும் இப்பாடலைக் கேட்டு மலர் போன்ற மனதைப் பெறுங்கள் .
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
வரம் தரும் அன்னை வணங்கினோம் உன்னையே
வரம் தரும் அன்னை வணங்கினோம் உன்னையே
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
ஒரு நோயும் தீண்டாமல் அணை போடு தாயே
நதி காய நேராமல் நீரூற்று தாயே
நன்னிலம் பார்த்து நீயே
எளியோரை மகிழ்வாக்க வழி காட்டு தாயே
வலியோர்கள் வாட்டாமல் வகை காட்டு தாயே
என் வளமான தாயே
பசி தாகம் காணாமல் வயிறாக்கு தாயே
ரசிப்போர்கள் செவி தேடி இசை மூட்டு தாயே
இசை பாட்டு என்றென்றும் இனிப்பாக்கு தாயே -(மலர் போல)
புகழ் செல்வம் நலம் கல்வி குறைவின்றி வாழ
புவி மீது இறை ஞானம் எமை என்றும் ஆள
பொன் குறையாமல் வாழ
அருளோடு பொருள் பேத அறிவோடு ஞானம்
தெளிவோடு தினம் காணும் நிலை வேண்டும் வேண்டும்
அது திரளாக வேண்டும்
பல வீடு பல நாடு பல தேசம் என்று
உணராமல் வாழ்வோரை ஒன்றாக்கு தாயே
உறவோடு மகிழ்வோடு எமை மாற்று தாயே -(மலர் போல)
02 ஏப்ரல் 2012
இருமல் மாத்திரை சாப்பிட்டா இருமல் வருமா? SMS ஜோக்ஸ்
சில்வர் செயினை உருக்குனா சில்வர்வரும்
கோல்டு செயினை உருக்குனா கோல்டு
வரும்
சைக்கிள் செயினை உருக்குனா சைக்கிள் வருமா???
------------------------------------------------------------------------------
ஹோட்டல்ல சாப்பிட்டதுக்கு
காசு இல்லண்ணா
மாவாட்ட சொல்லுவாங்க பஸ்சுல டிக்கெட்டுக்கு காசு இல்லண்ணா
பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?
--------------------------------------------------------------------------------------------------
கப்பல் ஓடுவது பெட்ரோலிலா? டீசலிலா?
கடலில்
-----------------------------------------------------------------
பாயாசம் பத்து நாளா வச்சிருந்தா பாய்சன் ஆயிடும்
ஆனா பாய்சன பத்து நாளா
வச்சிருந்தா பாயாசமாகாது !!!
----------------------------------------------------------------------------------------------
தூக்க மாத்திரை சாப்பிட்டா தூக்கம் வரும்
இருமல் மாத்திரை சாப்பிட்டா இருமல் வருமா?
-------------------------------------------------------------------------------------------------
சும்மா இருக்கிறவன் சும்மா இல்லாம சும்மா இருக்கிறவுங்களை சும்மா கிண்டல் பண்ணுனா சும்மா இருக்கிறவுங்க சும்மா சும்மா கிண்டல் பண்ணுனவனை சும்மா விடமாட்டாங்க.......
உலக அதிசயங்கள் 7 ஐ யும் இலவசமாக சுற்றி பார்க்க!
உலகின் புதிய 7 அதிசயங்கள் போர்ச்சுக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் நடந்த
விழாவில் கடந்த 7-7-2007 ல் அறிவிக்கப்பட்டன .
உலக அதிசயம் ஒன்றை பார்ப்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும் . இவ்வேளையில் சாமானிய மக்களும்
உலகின் பல்வேறு பகுதிகளை நேரில் பார்த்த அதே களிப்புடன் பார்வையிட
இணையத்தில் வசதிகள் உள்ளன .
இங்கே நான் பகிர்ந்துள்ள தளம் வாயிலாக உலகின்
புதிய 7 அதிசயங்களையும் 36ஂ கோணத்தில் பார்வையிடலாம் .கிட்டத்தட்ட
அதிசய உலகத்திற்கு நேரில் சென்று பார்த்த திருப்தி ஏற்படுகிறது.
நீங்களும்
உலக அதிசயங்களை இலவசமாகக் காண இங்கே சுட்டுங்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




