26 ஜனவரி 2013

முட்டையிலிருந்து கோழி வரவில்லை -ஆராய்ச்சி முடிவு !

கோழியிலிருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்து வருகிறது. 


இந்த நீண்ட நாள் கேள்விக்கு தற்போது விடை கண்டு பிடித்துள்ளார் நமது மாநிலத்திற்கு அண்டை மாநிலமான  புதுவையிலுள்ள விஞ்ஞானி ஒருவர். 

இந்த ஆராச்சிக்காக அவர் ஒரு கோழியையும் பத்து முட்டைகளையும் பயன்படுத்தியுள்ளார் . 

பத்து முட்டைகளையும் அந்த ஒரு கோழியை வைத்து அடை காக்க வைத்துள்ளார் . சிறிது நாட்கள் கழித்து முட்டையை பரிசோதித்த விஞ்ஞானி ஆனந்தக் கூத்தாடினார் . காரணம் அவரது ஆராய்ச்சிக்கு முடிவு  கிடைத்துவிட்டது . முட்டையிலிருந்து கோழிகள் எதுவும் வரவில்லை மாறாக கோழி குஞ்சுகள்தான் வந்துள்ளன. 

இதன் மூலம் நீண்ட நாள் பிரச்சினைக்கு முடிவு கட்டிஇருப்பதாக கூறியுள்ளார் அவ்விஞ்ஞானி . இதற்காக தனக்கு இன்னும் 15 நாட்களில் நோபல் பரிசு கிடைக்கும் எனவும்  அடித்துக் கூறுகிறார் வில்லேஜ் விஞ்ஞானி நா.சா .

3 கருத்துகள்:

அம்பாளடியாள் சொன்னது…

முட்டையிலிருந்து கோழிகள் எதுவும் வரவில்லை மாறாக "கோழி குஞ்சுகள்தான் "வந்துள்ளன.
அடடா என்ன ஒரு அறிவு !!!!......பரிசு எப்ப வாங்கப் போறீங்க மன்னிக்க வேண்டும் சகோ பரிசு
எப்ப வாங்கப் போறார் அந்த விலேஜ் விஞ்ஞானி ?....:))

அம்பாளடியாள் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கும்மாச்சி சொன்னது…

ஐயோ எங்கேயோ போயிட்டாரு அந்த வி.வி.