25 மார்ச் 2011

ஜப்பானில் அணு உலை விபத்து -கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பிரியாணி விருந்து !

         உலகையே துயரத்தில் ஆழ்த்தியிருக்கும் ஜப்பான் பூகம்பம் மற்றும் சுனாமி மேலும் அதை விட கொடூரமான அணு உலை விபத்தால் நித்தமும் அவதிக்குள்ளாகி வருகிறாகள் அப்பாவி ஜப்பான் மக்கள் .உலக மக்கள் அனைவரும் இந்த கோர நிகழ்வுகளுக்கு அனுதாபம் தெரிவித்து வரும் இவ்வேளையில் கூடங்குளம் அணுமின் திட்ட நிர்வாகம் ஓர் அசிங்கத்தை அரங்கேற்றியிருக்கிறது .ஜப்பான் அணுஉலை விபத்துக்கு சிறிதும் அனுதாபம் தெரிவிக்காமல் கூடங்குளம் அணுமின் நிலைய ஆதரவாளர்களை அழைத்துபிரியாணி விருந்து வழங்கி கொண்டாடியிருக்கிறது .

       ஜப்பான் அணு விபத்தால் பல்வேறு நாடுகளும் அணுசக்தி திட்டங்களை மறுபரிசீலனை செய்ய தொடங்கியுள்ளன .ஆனால் கூடங்குளம் அணுமின் திட்ட இயக்குனர் திரு காசிநாத் பாலாஜி அவசரமாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி ஜப்பான் போன்றதொரு விபத்து கூடங்குளத்தில் நிகழ வாய்ப்பே இல்லை என்று பேட்டியளித்தார் .அதோடு நில்லாமல் கூடங்குளம் பகுதி மக்களிடமிருந்து அணு உலைக்கு எதிர்ப்பு வரும் என்று எண்ணி எந்த ஒரு நிலையிலும் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு ஆதரவாக செயல் படும் கூடங்குளம் ஊர் மக்கள் 50 பேரை   கடந்த 23-3-2011 அன்று அணுமின் நிலையத்திற்குள் அழைத்து சென்று அரசியல் கட்சிகளை மிஞ்சும் வகையில் அவர்களுக்கு விருந்தளித்து தொடர்ந்து அணு மின் நிலையத்திற்கு ஆதரவு தரவேண்டும் எனவும் அணு மின் நிலையத்தின் நன்மைகள் குறித்து மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுளார் .கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை கூடங்குளம் பகுதி மக்களிடம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது .

கருத்துகள் இல்லை: