திருமணமானபின்பு பெரும்பாலோனோரின் கவலை அவர்கள் குழந்தைகளின்
எதிர்காலத்தைப் பற்றியதாகத்தான் இருக்கும் .அதனால் வாழ்வின் பெரும்பகுதியை
அவர்களுக்காகவே செலவழிக்கிறார்கள் .
குழந்தைகளை படிக்க வைக்க சிரமப்
படுகின்றார்கள், அவர்களுக்கு சொத்து சேர்த்து வைக்க சிரமப்
படுகிறார்கள்.
ஆனால் எதிர்காலத்தில் நம் குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால்தானே நாம் கஷ்டப் பட்டதற்கான பலனை அவர்கள் அடைய முடியும். எதிர் காலத்தில் நம் சந்ததிகள் ஆரோக்கியமாக வாழவேண்டுமானால் இன்று நாம் நமது சுற்று சூழலைப் பாதுகாக்கவேண்டும் .
உலக சுற்று சூழல் தினமான இன்று சுற்று
சூழலைப் பாதுகாக்க நம்மால் கடை பிடிக்க இயலக்கூடிய பத்து வழிகளைக்
கூறுகின்றேன்.
1)இன்று சுற்று சூழலுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவது பிளாஸ்டிக் பைகள். எனவே பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை கூடுமான வரையில் தவிர்த்துவிடுங்கள்.கடைகளுக்கு பொருட்கள் வாங்குவதற்கு வீட்டிலிருந்தே துணிப் பைகளை எடுத்து செல்லுங்கள்.
2) அடுத்த அச்சுறுத்தல் வாகனப் புகை
.நாகரீகமென்ற பெயரில் ஒருவருக் கொருவர் போட்டியிட்டு கார்களையும்
பைக்குகளையும் வாங்கி சாலைகளை நிரப்பிவிட்டோம். பெட்ரோல் விலையை எவ்வளவு
ஏற்றினாலும் தொடர்ந்து வாகனங்களைப் பயன்படுத்தி வருகிறோம் .அவசியப்
பட்டாலன்றி பைக்குகள் , கார்களை உபயோகிப்பதை தவிர்ப்போம்.
3 ) மரம்
வளர்ப்போம் .மனித வாழ்க்கைக்கும் உலக சுற்று சூழலுக்கும் மரங்கள் பேருதவி
செய்கின்றன.எனவே நம்மாலியன்ற வரையில் எவ்வளவு மரங்களை வளர்க்க முடியுமோ
வளர்ப்போம்.
4) புவி வெப்பமயமாதலுக்கு காரணமாக விளங்கும் வாயுக்களை அதிக அளவில் வெளியிடும் குளிர்சாதனப் பெட்டிகள், மற்றும் AC பயன்படுத்துவதை கூடுமான வரையில் தவிர்ப்போம்.
5) மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவோம் .அனல் மின் நிலையங்கள் மற்றும் அணுமின் நிலையங்கள் சுற்றுசூழலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன .மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் மேற்கண்டவற்றின் பாதிப்புகளைக் குறைக்க முடியும்.
6) பயன் தரும் மரங்களை வெட்டாமல் பாது காப்போம். மனிதனால் அசுத்தமாக்கப் படும் காற்று மண்டலத்தை தூயமையாக்குபவை மரங்கள் என்பதை மறக்கவேண்டாம்.
7 ) சுற்று சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சீமைக் கருவேல மரங்கள் மற்றும் பார்த்தீனியம் செடிகளை அழித்தொழிப்போம்.
8) நீர் நிலைகள் மற்றும் தெருவோர வாறுகால்களை சுத்தமாக வைத்திருப்போம்.இதன் மூலம் கொடிய நோய்கள் பரவுவதைத் தடுக்கலாம் .
9 ) நிலத்தடி நீரை உறிஞ்சுவதைக் குறைத்து நிலத்தடி நீர் மிகுதியாக மழைநீர் சேகரிப்பு வசதிகளை வீடுகளில் ஏற்படுத்துவோம்.
10 ) மின்சாரத்தை அதிக அளவில் எடுத்துக்கொண்டு வெப்பத்தை அதிகரிக்கும் குண்டு பல்புகளுக்கு விடை கொடுத்துவிட்டு CFL பல்புகள் LED பல்புகளை பயன்படுத்துவோம்.
நாம் நமது சந்ததிகளுக்கு சேர்த்து வைக்கும் மிகப்பெரும் சொத்து சுற்றுசூழல் பாதுகாப்புதான்.
4) புவி வெப்பமயமாதலுக்கு காரணமாக விளங்கும் வாயுக்களை அதிக அளவில் வெளியிடும் குளிர்சாதனப் பெட்டிகள், மற்றும் AC பயன்படுத்துவதை கூடுமான வரையில் தவிர்ப்போம்.
5) மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவோம் .அனல் மின் நிலையங்கள் மற்றும் அணுமின் நிலையங்கள் சுற்றுசூழலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன .மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் மேற்கண்டவற்றின் பாதிப்புகளைக் குறைக்க முடியும்.
6) பயன் தரும் மரங்களை வெட்டாமல் பாது காப்போம். மனிதனால் அசுத்தமாக்கப் படும் காற்று மண்டலத்தை தூயமையாக்குபவை மரங்கள் என்பதை மறக்கவேண்டாம்.
7 ) சுற்று சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சீமைக் கருவேல மரங்கள் மற்றும் பார்த்தீனியம் செடிகளை அழித்தொழிப்போம்.
8) நீர் நிலைகள் மற்றும் தெருவோர வாறுகால்களை சுத்தமாக வைத்திருப்போம்.இதன் மூலம் கொடிய நோய்கள் பரவுவதைத் தடுக்கலாம் .
9 ) நிலத்தடி நீரை உறிஞ்சுவதைக் குறைத்து நிலத்தடி நீர் மிகுதியாக மழைநீர் சேகரிப்பு வசதிகளை வீடுகளில் ஏற்படுத்துவோம்.
10 ) மின்சாரத்தை அதிக அளவில் எடுத்துக்கொண்டு வெப்பத்தை அதிகரிக்கும் குண்டு பல்புகளுக்கு விடை கொடுத்துவிட்டு CFL பல்புகள் LED பல்புகளை பயன்படுத்துவோம்.
நாம் நமது சந்ததிகளுக்கு சேர்த்து வைக்கும் மிகப்பெரும் சொத்து சுற்றுசூழல் பாதுகாப்புதான்.


9:42 AM
koodal bala



5 comments:
பிரயோசனமான பதிவு இன்றைய தினத்திற்கு அவசியமானதுவும் கூட...நன்றி சகோ..
பயனுள்ள பகிர்வு பின்பற்றுபவர்கள் தான் குறைவு .
சுற்றத்துடன் கூடி
சுற்றுச் சூழல் காப்போம்...
பின் பற்ற கொஞ்சம் கடினம் என்றாலும் முயன்றால் பிற்காலத்திற்கு நல்லதுதான்.
நல்ல பதிவுங்க கூடல் பாலா.
பயனுள்ள பதிவு பாலா...
கருத்துரையிடுக