கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் போராட்டம்
நடத்தி வருகின்றன.
நேற்று முன் தினம் (11-02-2011) மக்கள் கலை இலக்கிய
கழகம் ,புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி ,விவசாயிகள் விடுதலை
முன்னணி,புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ,பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய
அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூடங்குளத்தில் ஒரு மிகப் பெரிய பேரணியும்
ஆர்ப்பாட்டமும் நடத்தினர் .
* இந்தியாவை அமெரிக்காவின் அடிமையாக்கும்
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை கிழித்தெறிவோம்,
* வளர்ச்சி-வேலை
வாய்ப்பு-வல்லரசு என்று ஆசை காட்டி தேசத் துரோக மக்கள் விரோத சதியில் ஈடு
பட்டிருக்கும்காங்கிராஸ்,பாரதீய ஜனதா உள்ளிட்ட ஓட்டுப் பொறுக்கிகளைப்
புறக்கணிப்போம் ,
* தனியார் மயம்,தாராளமயம் ,உலகமய-மறு காலனியாதிக்கத்தை
முறியடிப்போம்
போன்ற கோஷங்களை எழுப்பினர்.போராட்டத்தில் 2000 பேருக்கும்
அதிகமானோர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தையொட்டி அணு மின் நிலையத்தின் முன்
போலீஸ் குவிக்கப்பட்டுள்ள காட்சி





