21 ஜூன் 2011

1 நிமிஷத்துல இத்தனை சமாச்சாரமா ?!

மக்கள் இண்டர்நெட்டை உபயோகிக்க ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார்கள் இன்று இன்டர்நெட் பயன் பாட்டிற்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது .

60வினாடிகளுக்குள் இன்டர்நெட் உலகில் என்ன சமாச்சாரமெல்லாம் அரங்கேறுகிறது என்பதை பார்ப்போம் .

1 .உலகின் முதல் நிலை தேடுதல் எந்திரமான கூகுள் 6,94,445 விசாரணைகளுக்கு பதிலளிக்கிறது .

 கூடுதல் தகவல் : இனி அதிக அளவில் தகவல்களை கூகுளிடம் விசாரணை செய்பவர்களிடம் கூகுள் குறுக்கு விசாரணை செய்யவிருப்பதாக அமெரிக்காவிலிருந்து  வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன !?


2 . 16,80,000,00 E mail கள் அனுப்பப்படுகின்றன .

கூடுதல் தகவல் :தபால்துறை பெரும் இழப்புக்களை சந்தித்து வருவதால் இந்தியாவில் E mail அனுப்புவதை தடை செய்யக்கோரி விரைவில் தபால் துறையினர் போராட்டத்தில் இறங்க உள்ளதாக புது டில்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன ?!

3 . 5,10,040 comment கள் Face book ல் வெளியாகின்றன .
கூடுதல் தகவல் :இவற்றில் 90 சதவீதம் கமெண்ட்கள் டெம்ப்ளேட் கமெண்டுகள் என்பதை  விக்கிலீக்ஸ் விரைவில் அம்பலப் படுத்த உள்ளதாக சுவீடனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன ?!

4 . 25  மணி நேரம் ஓடக்கூடிய 600  வீடியோ கிளிப்புகள் youtube  தளத்திற்கு தரவேற்றம் செய்யப்படுகின்றன .
கூடுதல் தகவல் :வழக்கம் போல பலான வீடியோக்கள்தான் அதிக அளவில் தரவேற்றம் செய்யப்படுவதாக பாரிசிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன ?!

5 . 3,70,000 நிமிடங்களுக்கான குரல் அழைப்புகள் Skype தளத்தின் மூலம் பகிரப்படுகிறது .
கூடுதல் தகவல் :இனி ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக ஓசியில் கதைப்பவர்களின் மைக் துண்டிக்கப்படும் என்று லண்டனிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன




டிஸ்கி :பிளாக்கர்கள் குறித்தும் ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது .பிளாக்கர்களின் மன நலனை கருத்தில் கொண்டு கூகுள் அத்தகவலை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக வியட்நாமிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

16 கருத்துகள்:

saro சொன்னது…

உங்கள் பதிவு நன்றாக இருந்தது ,செய்திகளை கீழே பதியவும்.

Tamil Movies Gallery

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இன்ஃபர்மேஷன் வித் காமெடி.. அட

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

தமிழ்மனம் ஓட்டு போட முடியலை.. நோ சஸ் போஸ்ட் என வருது.. பாருங்க

சக்தி கல்வி மையம் சொன்னது…

கலக்கல் பக்கங்கள்.

கடம்பவன குயில் சொன்னது…

கூடுதல் தகவல் கூடல் பாலா டிரேட்மார்க்கா?. நல்லா இருந்தது.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கூடுதல் தகவல் :தபால்துறை பெரும் இழப்புக்களை சந்தித்து வருவதால் இந்தியாவில் E mail அனுப்புவதை தடை செய்யக்கோரி விரைவில் தபால் துறையினர் போராட்டத்தில் இறங்க உள்ளதாக புது டில்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன ?!//

என்னாது டெல்லியா....அப்போ உருப்பட்டுரும்.....!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வியட்நாமிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.//


அடபாவி சரியான உள்குத்துன்னு இப்போல்லா தெரியுது ம்ஹும்...

கூடல் பாலா சொன்னது…

@சி.பி.செந்தில்குமார்நீங்க ரொம்ப புகழ்றீங்க ....

கூடல் பாலா சொன்னது…

@!* வேடந்தாங்கல் - கருன் *!சரி

கூடல் பாலா சொன்னது…

@கடம்பவன குயில்வேற என்னங்க பண்றது பதிவுலகத்துல எல்லாமே டிஸ்கி மயமா ஆகிட்டு வருது .....நன்றி குயில் !

கூடல் பாலா சொன்னது…

@MANO நாஞ்சில் மனோஆமா ......உங்க நண்பர் ஒருத்தர் வியட்நாமுல இருக்கிறாரில்ல.......இப்பத்தான் எனக்கே தெரியுது ...

Unknown சொன்னது…

அடப்பாவமே...
நடத்துங்க மாப்ள!

கூடல் பாலா சொன்னது…

@விக்கியுலகம்ஆஹா ....இப்பத்தான் நெனச்சேன் வந்துட்டீங்களா மாம்ஸ் .....

உலக சினிமா ரசிகன் சொன்னது…

இ மெயிலை எப்படி தடை செய்ய முடியும்?.
இ.மணியார்டரே இமெயில் மூலமாகத்தான் தகவல் பறிமாறப்படுகிறது.

அவன் இவன் இயக்கியது எவன்? என சூடாக பதிவிட்டுள்ளேன்.
அடியேன் பாலாவின் பரம ரசிகன்.
வருகை தந்து கருத்து சொல்லவும்.

நிரூபன் சொன்னது…

ஒரு நிமிடத்தில் கணினி மூலமாக இத்தனை விடயங்கள் நடை பெறுகிறதா.
வியப்பாக இருக்கிறது சகோ.

தகவல் பகிர்விற்கு நன்றி.
கடைசி டிஸ்கியில் உள் குத்து ஏதும் இல்லையே;-))

நண்பன் சொன்னது…

எதையுமே பெரிதாக எடுத்துகொள்ள தேவை இல்லை நடப்பதெல்லாம் நன்மைக்கே அவ்வளவுதான்