16 மார்ச் 2012

கூடங்குளம் போராட்டத்தில் முன்னாள் கப்பல் படை தளபதி !

கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன .

நேற்றைய (15-03-2012) உண்ணாவிரதத்தில் இந்திய கப்பல் படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ராம்தாஸ் கலந்துகொண்டார்.

மேலும் விஞ்ஞானிகள் உட்பட நாடு முழுவதுமிருந்து 200  க்கும் மேற்பட்ட அணு உலை எதிர்ப்பாளர்கள் கலந்துகொண்டனர் .5000  க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

மேலும் நேற்று கூடங்குளம் அணு உலையை உடனடியாக செயல் படுத்தவேண்டும் என்று கூறிய முன்னாள் முதல்வர் கருணாநிதியை கண்டித்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் கருப்புக்கொடி ஏந்தி பொதுமக்கள்  பேரணி  சென்றனர் .

உண்ணாவிரத பந்தலில் உரையாற்றிய அட்மிரல் ராம்தாஸ் 

நேற்றைய போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் 

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக பேரணி நடத்திய பொதுமக்கள் 

3 கருத்துகள்:

மகேந்திரன் சொன்னது…

இணைந்த கைகள் வலுப்பெறட்டும்
கொண்ட கொள்கைகள் வெல்லட்டும்...

Prabu Krishna சொன்னது…

போராட்டத்தின் வீரியம் ஒவ்வொரு நாளும் அதிகரிப்பதை எண்ணி மிகவும் மகிழ்கிறேன்.

கண்டிப்பாக மூடப்படும் கூடங்குளம் அணு உலை.

பெயரில்லா சொன்னது…

தொடர்ந்து செய்தி தாருங்கள்... உங்கள் பணி தொடரட்டும்...

கூடங்குளம் அணு உலை கண்டிப்பாக மூடப்படும்...வெற்றி வெகு தொலைவில் இல்லை...