11 மார்ச் 2012

ஜப்பான் மக்களுக்கு அஞ்சலி.

கடந்த ஆண்டு இதே நாள் மறக்க முடியாத சோகம் ஒன்றை ஜப்பான் மக்கள் அடைந்த நாள் .


கடந்த 11-03 2011 ல் ஜப்பான் வரலாற்றில் மிகவும் மோசமான பேரழிவை சந்தித்தது .9  ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் பல நகரங்கள் சிதைந்து சின்னாபின்னமாயின 

அதைத் தொடர்ந்து வந்த சுனாமி பல்லாயிரம் மக்களை நிர்மூலமாக்கியது .

அடுத்த பெரும் சோதனையாக நான்கு அணு உலைகள் வெடித்து சிதறின .

அதனால் பல்லாயிரக்கணக்கானோர் சொந்த ஊரைக் காலி செய்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர் .


இவ்வேளையில் பேரழிவால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம். 

வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டவர்கள் விரைவில் மீழவும் இது போன்றதொரு பேரழிவு இன்னொரு முறை நிகழாமல் இருக்கவும் இறைவனை வேண்டுவோம் .

10 மார்ச் 2012

உலகம் முழுவதும் அணு உலைக் கட்டுமானம் கடும் வீழ்ச்சி !

நன்றி : The Guardian
சமீப காலமாக உலக நாடுகள் மின் தேவைக்கு அணு உலைகள் அமைப்பதை வெகுவாகக் குறைத்துள்ளன.இது பற்றி கிரீன்விச் பல்கலைக் கழக எரிசக்தித் துறை பேராசிரியர் ஸ்டீவ் தாமஸ் கூறியதாவது ,  

கடந்த 2008  ம் ஆண்டு முதல்  2010  வரையிலான காலத்தில் உலகம் முழுவதும் 38  அணு உலைகள் புதிதாக கட்டத் துவங்கப் பட்டன .ஆனால் கடந்த ஒரு வருடமாக அதாவது 2011 -12  ல் உலகம் முழுவதும் வெறும் இரண்டு அணு உலைகள் மட்டுமே புதிதாகக் கட்டத் துவங்கப் பட்டுள்ளன .

இதற்குக் காரணம் கடந்த ஆண்டு ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலையில் நிகழ்ந்த விபத்தால் உலக நாடுகளிடையே அணு உலைகள் அமைக்க அச்சம் எழுந்துள்ளது .ஃபுகுஷிமா அணு உலை விபத்தால் அதிக உயிர்ச் சேதம் இல்லையென்ற பொழுதும் பல்லாயிரக் கணக்கானோர் சொந்த வீடுகளை காலி செய்துவிட்டு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர் .

* ஜெர்மனி,ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளிலுள்ள அனைத்து அணு உலைகளையும் படிப் படியாக மூட முடிவு செய்துள்ளன.

* குவைத் அரசாங்கம் கட்டத் திட்டமிட்டிருந்த நான்கு அணு உலைகளுக்கான ஒப்பந்தத்தை ஒரு மாதத்திற்கு முன்னதாக ரத்து செய்துள்ளது .

* வெனிசுலா அரசு தனது அனைத்து அணு சக்தித் திட்டங்களையும் நிறுத்தி வைத்துள்ளது .

* மெக்சிக்கோ கட்ட திட்டமிட்டிருந்த 10  அணு உலைகளுக்கான திட்டத்தை ரத்து செய்துள்ளது .

* சீன அரசு 2020  ம் ஆண்டிற்குள்ளாக புதிதாக 40000  மெகாவாட் மின்சாரம் அணு மின் நிலையங்கள் மூலமாக பெறத் திட்டமிட்டிருந்தது ,ஆனால் மக்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக அவை கிடப்பில் போடப் பட்டுள்ளன.

சமீபத்தில் உலகிலுள்ள 24  நாடுகளில் நடத்தப் பட்ட கருத்துக் கணிப்பில் 62 % மக்கள் அணு உலைகள் வேண்டாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர் .

07 மார்ச் 2012

கூடங்குளம் அணு உலைப் போராட்டத்தின் வரவு செலவுக் கணக்கு இதோ !

அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தின் 200 வது நாள் எட்டியதை முன்னிட்டு,

அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கம் தங்கள் பணபரிவர்த்தனைகள்(a statement of accounts) முழுவதுமாக வெளியிட்டது..... வெளியிட்டடதின் காரணம் தங்கள் போராட்டத்திற்கு எந்த வெளிநாட்டு தொண்டுநிறுவனங்கள் உதவி செய்யவில்லை என்பதை நிரூபிக்கவே
 
அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கம் முப்பது பேர் கொண்ட நிதி குழு ஒன்றை வைத்து தங்களுக்கு வரும் உதவிகளை உரிய முறையில் ஆவண படுத்தியுள்ளது.... அந்த குழு உறுப்பினர் திரு.ஜி.ஸ்டான்லி வெளியிட்ட அறிக்கை இதோ அகத்து(August) 14, 2011 இல் ஆரம்பித்து Feb 26,2012 வரை இந்த இயக்கத்திற்கு வந்த பணம் அதற்க்கான கணக்குகளை சரிபார்க்கும் போது அந்த இயக்கத்திற்கு மொத்த பணஉதவி 2,517,991 (இந்திய ரூபாயில்).... இந்த பணத்தை வைத்து கொண்டு இயக்கப்போரட்டங்களை நடத்த அதிலிருந்து பயன்படுத்தப்பட்ட ருபாய் 1,764,233 நன்கொடையாக வசூளிக்ப்பட்ட பணத்திற்கு உரிய ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன .....

அதே போல் ஆரம்பகட்டத்தில் இந்த இயக்கம் ஆரம்பிப்பதற்க்கும், மக்கள் போராட்டத்தை அரசின் கவனத்திற்கும் எடுத்துசெல்ல இடிந்தகரை ஊரில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ருபாய் 200 வசூலிக்கப்பட்டது பின்னர் இந்த விவகாரம் பெரிய அளவில் இட்டுசெல்லும், அதே போல் மிக நீண்ட நாட்கள் நடக்க வாய்ப்புள்ளது என்பதை அறிந்த குழுவினர் அந்த ஊர் மக்களிடம் வைத்த கோரிக்கை இது தான் "நீங்கள் தினசரி செய்யும் மீன்பிடி தொழிலில் வரும் வருமானத்தில் ஒரு வாரத்திற்கு பத்து சதவிகிதம் நன்கொடையாக தந்தால் போராட்டம் வெற்றிகரமாக இட்டுசெல்ல முடியும் என்பதே அந்த கோரிக்கை" மக்களும் அந்த கோரிக்கைக்கு செவி சாய்த்து தங்கள் ஒரு வார வருமானத்தில் பத்து சதவிகிதத்தை நன்கொடையாக அளித்தனர்...

இந்த நன்கொடைக்கு மேலும் வலுசேர்த்தவர்கள் அந்த ஊரில் உள்ள பீடி தொழிலாளர்கள்...அவர்களும் தங்கள் பங்கிற்கு முடிந்த உதவிகளை செய்தனர் ....

உடனே சில மேதாவிகள் வந்து எல்லாருமே போராட்த்தில் கலந்து கொண்டார்கள் என்றால் யார் மீன்பிடி தொழில் செய்வார்கள் எப்படி அவர்களுக்கு வருமானம் வரும் ??

... ஐயா கனவான்களே .... காலையில் நடக்கும் போராட்டத்தில் பெண்கள் கலந்து கொள்வார்கள் இரவில் ஆண்கள் வந்து கலந்து கொள்வார்கள்.... மேலும் விளக்கம் வேண்டும் என்றால் தினசரி நடுநிலை பத்திரிகைகளை வாசித்து தெரிந்து கொள்ளவும் ....

போரட்டக்காரகள் இந்த போராட்டத்திற்கு வசூலிக்கப்பட்ட நன்கொடையிளிருந்து துளியுன்ட்டும் சுரண்டவில்லை... சுரண்டுவதற்கு அவர்கள் அரசியல் வாதிகள் இல்லையே...

தங்களின் போக்குவரத்து செலவுகள், பயணம் செய்யும் போது வரும் செலவுகள் அனைத்தும் தங்கள் கைகாசை போட்டே சமாளித்து கொண்டனர்...

யார் வேண்டுமானாலும் ரசீதுகள் அடித்து கொள்ளலாம்... இதை ஏற்கமுடியாது என்று கூறுபவர்கள், ஆதாரம் கேட்போர் இடிந்த கரைக்கு சென்று ஒரு ஆடிட்டரை வைத்து சரி பார்த்து கொள்ளவும்.... தப்பாக இருந்தால் முச்சந்தியில் வைத்து என்னை செருப்ப கழட்டி அடிக்கலாம்.... வணங்கி ஏற்றுக்கொள்வேன்....

மாறாக உண்மையாக இருந்தால் உங்கள் பதில்..... ??? அப்போது யாருமே வாயை திறக்கவே மாட்டீர்கள் இது நன்றாகவே தெரியும்...

மதியழகன்

04 மார்ச் 2012

மதங்களை ஒன்றிணைத்த கூடங்குளம் போராட்டம்!

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி நடை பெற்று வரும் போராட்டம் பல்வேறு தடைகளையும் தாண்டி 200  நாட்களைக் கடந்து தொடர்ந்துகொண்டிருக்கிறது. 

இப்போராட்டங்களில் நம் சமூகத்திற்கு மிகவும் அவசியமான சில நிகழ்வுகள் இங்கே நடக்கின்றன.

அது மத ஒருமைப் பாடு .

இடிந்தகரை கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்து வரும் உண்ணாவிரதத்தில் ஏராளமான இந்து மதத்தினர் கலந்துகொள்கிறார்கள் .

இந்நிலையில் இன்று அணு உலையை மூடவேண்டி கூடங்குளம் அருள்மிகு அரசமரத்து விநாயகர் திருக்கோவிலிலிருந்து விஜயாபதி அருள்மிகு விஸ்வாமித்திர மகா லிங்கேஸ்வரர் கோவில்(இத்திருத்தலம் பிரம்ம ரிஷி பதவியை அடைய விஸ்வாமித்திர மகரிஷி ஸ்ரீராமன் ,ஸ்ரீஇலக்குவன் துணையோடு யாகம் செய்த இடமாக இராமாயணம் கூறுகிறது)  வரை 7  கிலோ மீட்டர் தொலைவிற்கு பக்தர்கள் பால்குடம் ஏந்தி பாத யாத்திரை  சென்றார்கள் .

இந்து வழிபாடுகளில் மிகவும் பக்திப்பூர்வமாக செய்யப்படும் நேர்த்திக் கடன்களில் பால் குடம் எடுத்துச் செல்வதும் ஒன்று.

இந்த ஊர்வலத்தில் பல கிறிஸ்தவர்களும் பால்குடம் ஏந்தி வந்தது மெச்சும்படியாக இருந்தது.




மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் மார்க்கம் ஒன்றுதான் என்பதை இந்நிகழ்வுகள் உணர்த்தின.

02 மார்ச் 2012

துக்கமனைத்தையும் போக்கும் துக்க நிவாரண அஷ்டகம்


பாடலைக்   கேட்க இங்கே சுட்டவும்

மங்கல ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீக்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே
கங்கணபாணியன் கனிமுகம் கண்ட நல் கற்பகக் காமினியே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி


காணுறு மலரெனக் கதிரொளி காட்டி காத்திட வந்திடுவாள்
தானுறு தவ ஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள்
மானுறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி


சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
என் குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்தநல் துர்க்கையளே
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி


தணதண தந்தண தவிலொலி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்
கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி


பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்ச நல்பாணியளே
கொஞ்சிடும் குமரனை குணமிகு வேழனை கொடுத்த நல்குமரியளே
சங்கடம் தீர்த்திடச் சமரது செய்த நற்சக்தி எனும் மாயே
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி


எண்ணிய படி நீ அருளிட வருவாய் என் குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி அதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி


இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்றுநீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமதை தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி


ஜெய ஜெய பாலா சாமுண்டீஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய ஜெயந்தி மங்களகாளி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி