31 மே 2011

ஏழரை லட்சம் கோடி ரூபாய் .....!இந்தியா தாங்குமா ?

ஏழரை லட்சம் கோடி .

மறுபடியும் ஊழலா என்று யாரும் நினைத்துவிடவேண்டாம் .இது புகுஷிமாவில் ஏற்பட்டுள்ள அணு உலை விபத்தினால் உண்டான பாதிப்புகளை சரி செய்ய ஆகும் செலவிற்கு ஜப்பான் அரசு உத்தேசித்துள்ள தொகை .

ஜப்பானின் புகுஷிமாவில் உள்ள அணுமின் நிலையங்களில் நிகழ்ந்த மோசமான விபத்தை கட்டுக்குள் கொண்டு வர ஜப்பான் அரசும் TEPCO நிறுவனமும் தீவிரமாக முயன்று வருகின்றன .

இந்நிலையில் ஜப்பான் பொருளாதார ஆராய்ச்சி மையத்தின் தலைவரான திரு கசுமசா எல்வாட்டா வெளியிட்டுள்ள செய்தியில் அணு உலை பாதிப்புகளை முற்றிலுமாக சரி செய்ய 10 வருடங்கள் ஆகும் எனவும் இதற்கு 250 பில்லியன் டாலர் அதாவது ஏழரை லட்சம் கோடி ருபாய் செலவாகும் என தெரிவித்துள்ளார் .

இந்தியாவை பொறுத்தவரையில் லட்சம் கோடியெல்லாம் பொதுமக்களுக்கு சாதாரணமாகிவிட்டது என்றாலும் பொருளாதார நிபுணர்களுக்குதான் அதன் உண்மையான மதிப்பு தெரியும் .

30 மே 2011

AMR FILE களை MP3 ஆக CONVERT செய்ய இலவச மென்பொருள் !

பல்வேறு  நிறுவனங்களின்  மொபைல் போன்களில் நமது குரலையோ அல்லது வேறு ஏதாவது தேவையான ஒலிகளையோ பதிவு செய்தால் அது AMR எனப்படும் கோப்பு வகையில் சேமிக்கப்படும் .

இதை நாம் நமது கணினிக்குள் மாற்றம் செய்தால் கணினியிலுள்ள அநேகமான PLAYER கள் அதை PLAY செய்யாது .மேலும் அதை CD ல் பதிவு  செய்தாலும் CD PLAYER ஆல் AMR கோப்பை இயக்க முடியாது .

இது போன்ற சிக்கல்களுக்கு தீர்வாக ஒரு அருமையான இலவச மென்பொருள் உள்ளது .AMR TO MP3 CONVERTOR என்று அழைக்கப்படும் இந்த மென்பொருளை கணினியில் நிறுவுவதன் மூலம் AMR கோப்புகளை MP3 கோப்புகளாக மாற்றம் செய்ய முடியும் .

29 மே 2011

அணு உலைகளை மூடக் கோரி 1,60,000 பேர் ஊர்வலம் .

      கடந்த 11-3-2011 அன்று ஜப்பானில் நடந்த அணு உலை விபத்தால் அந்நாட்டில் கடும் சுற்று சூழல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன .அணு உலை அமைந்துள்ள பகுதியிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் .

   இதை தொடர்ந்து இதே போன்ற பாதிப்புகள் தங்கள் நாட்டிலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று கருதி பல்வேறு நாடுகள் தங்கள் அணுமின் திட்டங்களை கை விடத் தொடங்கியுள்ளன .

   பல நாடுகளில் சுற்று சூழல் ஆர்வலர்கள் தங்கள் நாடுகளில் இயங்கிக்கொண்டிருக்கும் அணு உலைகளை மூட வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள் .

28 மே 2011

WINDOWS 7 : முழு ஆற்றலையும் பயன்படுத்த !

    இத்தகவல்  WINDOWS 7 OPERATING SYSTEM பயன்படுத்துபவர்களுக்கு உபயோகமானதாக இருக்கும் .

      எல்லா கணினிகளிலுமே GRAPHICS சம்மந்தமான PROGRAMகளை இயக்கம்போது கணினி சிரமப்படுவதை உணரலாம். உதாரணத்திற்கு PHOTOSHOP,AFTER EFFECTS போன்றவற்றை குறிப்பிடலாம் .

       அது போன்ற சிரமமான நேரங்களில் கணினியின் செயல்பாட்டு திறனை அதிகரிக்க WINDOWS 7 ல் ஒரு  வசதி மறைத்து வைக்கப்பட்டுள்ளது .

தமிழ் பாடல்களை தரமாக கேட்டு மகிழ இணைய தளம் !

        இசைக்கு மயங்காதவர் யார்தான் இருக்க முடியும் .இசையை கேட்டு மகிழ எத்தனையோ வழி முறைகளை உள்ளன .இசை  பல்வேறு பரிணாமங்களை கண்டு இன்று இணைய தளம் மூலமாகவும் மக்களை மகிழ்வித்து வருகிறது.


     தமிழ் பாடல்களை கேட்டு மகிழவும் தரவிறக்கவும் எத்தனையோ இணைய தளங்கள் உள்ளன .இப்போது நான் பகிரப்போகும் தளம் மிகச்சிறந்த இசை வலை தளங்களில் ஒன்று எனலாம் .
       இதிலுள்ள சிறப்புகளை சொல்லவேண்டுமானால் பாடல்களின் எண்ணிக்கை மற்றும் பாடல்களின் தரம் .எல்லாவற்றையும் விட சிறப்பம்சம் இங்கே பாடல்களை வகைப்டுத்தியிருப்பது .

27 மே 2011

கருப்பழகி -கட்டழகி (?)+.....!

          எனக்கு அவளால் இப்படி ஒரு அசிங்கம் நேரும் என நான் கனவிலும் நினைக்கவில்லை .தனி மனித ஒழுக்கத்திலும் உடல் தூய்மையிலும் அனைவராலும் மதிக்கப்பட்ட என்னை ஒரே நிமிடத்தில் ஊரார் சிரிக்க வைத்து விட்டாள்.

        அவள் பெயர் வடிவுக்கரசி .அவள் நிறமோ கருப்புதான் .ஆனால் அவள் உடலின் வளைவு நெளிவுகளாலும் இயற்கையாய் அமைந்த மேடு பள்ளங்களாலும் யாரையும் ஒரே நிமிடத்தில் கவிழ்த்தும் வல்லமை படைத்தவள் .அவள் முகத்தில் நமது முகத்தை பார்க்கலாம் அவள் முகம் அப்படி ஒரு பளபளப்பு .

26 மே 2011

USB பிளாஷ் டிரைவ்களை வைரஸில் இருந்து பாதுகாக்க இலவச மென்பொருள் !

   கணினியில் பெரும்பாலான வைரஸ்கள் flash drive கள் மூலமாகவே பரவுகின்றன .பொது இடங்களில் (பிரவுசிங் சென்டர்கள் ,கல்லூரிகள்) உள்ள கணினிகளில் நமது flash drive களை பயன்படுத்தும்போது வைரஸ் தாக்குதலுக்கு வாய்ப்புகள் அதிகம் .
      
      அது போன்ற சமயங்களில் நமது பிளாஷ் டிரைவ்களை பாதுகாக்க ஒரு நல்ல இலவசமாக கிடைக்கக்கூடிய USB DEFENDER எனும் மென்பொருள் உள்ளது .இதை தரவிறக்கி நமது flash drive ல் நிறுவி வைத்துக்கொண்டால் ஒரு தடுப்பு மருந்து போல் செயல்பட்டு flash drive ஐ பாதுகாக்கும் .

25 மே 2011

USB safely remove பிரச்சினையா? இலவச மென்பொருள் !

        உங்கள் கணினியில் இணைத்த USB DEVICE களை SAFELY REMOVE செய்ய முயற்சி செய்யும்பொழுது சிலசமயங்களில் இது போன்ற POP UP வரலாம் .
          
   எத்தனை முறை முயற்சி செய்தாலும் தொடந்து இது போலவே வந்துகொண்டிருக்கும் .FORMAT செய்ய முயற்சித்தால்  அதுவும் முடியாது .இந்த POP UP ஐ அலட்சியம் செய்துவிட்டு DEVICE ஐ அகற்றினால் அதிலுள்ள கோப்புகள் அனைத்தும் அழிந்துவிடும் .

24 மே 2011

படங்களை எளிதாக RESIZE செய்ய இலவச மென்பொருள் !

       இப்பொழுது பெரும்பாலும் புகைப்படங்கள் டிஜிட்டல் கேமராக்கள் மூலமாக எடுக்கிறோம் .அவ்வாறு எடுக்கப்படும் புகைப்படங்கள் அளவில் மிகவும் பெரிதாக இருக்கும்(5 MB வரை ).இவற்றை நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ ஈ மெயில்  மூலமாக அனுப்புவது சற்று சிரமமாக இருக்கும் .மேலும் பதிவிடும் சமயங்களில் முக நூலில் பகிர்தலிலும் பெரிய அளவுடைய புகைப்படங்கள் சிரமத்தை ஏற்படுத்தும்.

சபாஷ் ஜப்பான் !புதிய அணு உலைகளுக்கு தடா !

      ஜப்பான் பிரதமர் நேட்டோ கான் ஜப்பான் மக்களுக்கும் உலக மக்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளார் .10-05-2011 அன்று அவர் நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள செய்தியில் இனி ஜப்பானில் எக்காரணம் கொண்டும் புதிய அணு உலைகள் அமைக்கப்படாது என்றும் இதனால் உண்டாகும் மின் தட்டுப்பாட்டை சமாளிக்க காற்றாலைகள் மற்றும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் .இதை உலகெங்கிலும் உள்ள சுற்று சூழல் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளார்கள் .

டொர்னடோ பயங்கரம் : வீடியோ

       அமெரிக்காவில் இந்தவருடம் அடிக்கடி டொர்னடோ என்று அழைக்கப்படும் பயங்கர சூறாவளி காற்று தாக்கி வருகிறது .கடந்த 60 வருடங்களில் இல்லாத அரை மைல் அகலமான பயங்கரமான டொர்னடோ அமெரிக்காவின் ஜோப்லின் நகரை 23-5-2011 அன்று தாக்கி 116 பேரை பலி கொண்டது .மிக பயங்கரமான இந்த சூறாவளியை வீடியோ பதிவு செய்துள்ளனர் .வீடியோவை பாருங்கள் .பயங்கரம் தெரியும் .

23 மே 2011

20 நிமிடங்களில் WINDOWS XP இன்ஸ்டால் செய்யலாம் !

          நமது கணினியை சிலநேரங்களில் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக FORMAT செய்துவிட்டு புதிதாக OS ஐ இன்ஸ்டால் செய்வோம் .WINDOWS XP ஐ இன்ஸ்டால் செய்ய சாதாரணமாக 40 நிமிடங்கள் வரை ஆகும் .வேகமான கணினிகள் சற்று குறைவான நேரத்தை எடுக்கலாம் .WINDOWS XP ஐ வெறும் 20 நிமிடங்களில் இன்ஸ்டால் செய்ய ஓர் எளிய வழி உள்ளது .

17 மே 2011

புற்று நோயை குணமாக்கும் எளிய மூலிகை மருத்துவம் !

   புற்று நோய் எவ்வளவு கொடூரமானது என்பதை பலரும் அறிந்திருப்போம்.புற்று நோயை குணப் படுத்துவதற்க்கான சிகிச்சைகள் மிகவும் கடினமானதும் செலவு மிகுந்ததும் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.
   
  இதற்க்கு மாறாக மிகவும் எளிதான பக்க விளைவற்ற ஓர் மூலிகை மருத்துவத்தை தெரிந்துகொள்வோம் .
        

    இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .

SAFELY REMOVE USB டெஸ்க்டாப் ஷார்ட்கட் அமைக்கலாம் !

     வழக்கமாக நம் கணினியில் USB DEVICE களை இணைத்துவிட்டு அவற்றை அகற்ற TASK BAR ல் உள்ள SAFELY REMOVE USB MASS STORAGE DEVICE என்ற குறியீட்டை அழுத்தி அகற்றுவோம் . 

       DESKTOP ல் ஒரு SHORTCUT அமைப்பதன் மூலம்   சற்று எளிதாக இதே வேலையை  செய்யலாம் .

16 மே 2011

AUTORUN வைரசை அகற்ற எளிய வழி!

       கணினியை பயன்படுத்துவோர் பலருக்கும் AUTORUN வைரசை பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்கும் .இது பெரும்பாலும் FLASHDRIVE கள் மூலமாக பரவக்கூடியது.

      இது பல்வேறு வைரஸ் தாக்குதல் நமது கணினியில் நிகழ அடிப்படையானது.இதை சாதாரண முறையில் நமது கணினியில் இருந்து அழிக்க முயன்றால்  முடியாது.இதை நீக்க சில PROGRAM களும் உள்ளன. இருந்தாலும் SOFTWARE எதுவும் இல்லாமல் இதை கணினியில் இருந்து நீக்கலாம்.

15 மே 2011

விரும்பிய FOLDER ஐ TASK BAR ல் இணைப்பது எப்படி ?

  உங்கள் கணினியில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட FOLDER ஐ அடிக்கடி பயன்படுத்த நேரலாம் .அது போன்ற சூழ்நிலைகளில் அடிக்கடி MY COMPUTER திறந்து FOLDER ஐ தேடுவது சற்று கடினமாக இருக்கும் .இவ்வாறு  அடிக்கடி தேவைப்படும் FOLDER  ஐ TASK BAR ல் இணைத்துவிட்டால் அதை பயன் படுத்துவதுமிகஎளிது. .
            
     TASK BAR ல் FOLDER ஐ இணைக்க TASK BAR  ல்  RIGHT CLICK செய்து TOOL BAR ஐ தேர்வு செய்து அதில் NEW TOOL BAR என்பதை தேர்வு செய்ய  வேண்டும்.இப்போது ஒரு BROWSING WINDOW வரும் .இதில் நீங்கள் எந்த FOLDER ஐ TASK BAR  ல் இணைக்க விரும்புகிறீர்களோ அதை தேர்ந்தெடுத்து OK அழுத்தவும் .
     
    இப்போது TASK BAR ன் வலது புறத்தில் FOLDER இணைந்திருப்பதை காணலாம்.TASK BAR  ல் இருந்து இதை நீக்க TASK BAR  ல் RIGHT CLICK செய்து TOOL BAR ஐ தேர்வு செய்து அந்த FOLDER அருகிலிருக்கும் TICK ஐ எடுத்து விடுங்கள் .இப்போது FOLDER மறைந்திருக்கும் .
 
                         தகவல் உபயோகமானதாக இருந்தால் வாக்களியுங்கள் .

11 மே 2011

உட்கார்ந்த இடத்திலிருந்தே உலகை ரசிக்கலாம் !

     இணைய தளத்தை பயன்படுத்துபவர்கள் பெரும்பாலோனோருக்கு GOOGLE EARTH பற்றி தெரிந்திருக்கும் .GOOGLE EARTH மென்பொருள் பற்றி விளக்கமாக அறிய விரும்புபவர்களுக்கான பதிவு இது .
   
   GOOGLE EARTH மென்பொருள் மூலம் நமது கணினி முன் அமர்ந்தவாறே உலகின் எந்த ஒரு இடத்திற்கும் வினாடிகளில் பயணிக்கலாம் .அதன் மூலம் ஒவ்வொரு நாடுகளின் அமைப்பை நாம் கணினியில் இருந்தவாறே பார்த்து ரசிக்கலாம் .முன் பின் தெரியாத ஊர்களுக்கு செல்லுமுன் இதன் மூலம் அங்கு பயணித்து விட்டு அதன் பின்னர் செல்வோமானால் பயணம் எளிதாக அமையும் . 
     
     இனி இதை எப்படி பயன் படுத்துவது என்பதை பற்றி பார்க்கலாம் .முதலில் இங்கே கிளிக் செய்து GOOGLE EARTH மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் .

           இது இலவச மென்பொருள்தான் .நிறுவியபின் மென்பொருளை திறக்கவும் .இப்போது கீழே இருப்பது போன்ற ஒரு ஜன்னல் திறக்கும் .பெரிதாக பார்க்க விரும்புபவர்கள் படத்தின் மீது சுட்டவும் .
  1. நீங்கள் எந்த இடத்தை பார்க்க விரும்புகிறீர்களோ அதன் பெயரை இங்கே தட்டச்சு செய்து ENTER அழுத்துங்கள் .இப்போது அந்த இடத்திற்கு  நீங்கள் அழைத்து செல்ல படுவீர்கள் .MOUSE ஐ முன்னும் பின்னும் SCROLL செய்து அருகிலோ அல்லது தூரத்திலோ இருந்து  பார்க்கலாம் .

  2 . நீங்கள் எதாவது இடத்திற்கு பெயர் சூட்ட விரும்பினால் இதை தேர்வு செய்து நீங்கள் விரும்பும் இடத்தில் சுட்டி பெயர்சூட்டலாம் .
 
  3.இதை தேர்வு செய்து சுட்டுவதன் மூலம் இரு ஊர்களுக்கு இடையேயான தூரத்தை அளக்கலாம் .

     4.GOOGLE EARTH  ன் சிறப்பம்சமே இதில்தான் அடங்கியிருக்கிறது .இதை DRAG செய்து ஒரு தெருவில் நிறுத்தினால் அந்த தெரு இயற்கையாக உள்ளபடியே தோற்றமளிக்கும் .அனைத்து இடங்களையும் இது போல பார்வையிட தற்போது வசதி இல்லை என்றாலும் அனேக முக்கிய நகரங்களை பார்வையிட முடிகிறது ,
  
         GOOGLE EARTH ஐ பயன்படுத்தி இப்போதே உலகை வலம்  வரலாம் .

09 மே 2011

பிளாஸ்டிக் ஒழிப்பு -பலே கன்னியாகுமரி மாவட்டம் !

       இந்தியாவின் தெற்கு முனையான குமரி மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தின் மளிகை கடையில் சென்று மளிகை பொருள் வாங்கினால் கூட  பிளாஸ்டிக் பையில் பொருள் கிடைக்காது .
     பொருள் வாங்க பை எடுத்து செல்லவில்லை என்றால் பை எடுத்து வர சொல்லி கடைகாரர் திருப்பி அனுப்பிவிடுவார் .சாதாரண பெட்டிக்கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை எங்கு சென்று பொருள் வாங்கினாலும் இதே நிலைதான் .உண்மையிலேயே இது ஒரு பெரிய விஷயம்தான் .
   பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதற்கு அரசு தடை விதித்து பல மாதங்களாகியும் அதற்க்கான செயல் பாட்டை எங்குமே காண முடியவில்லை .ஆனால் விதிவிலக்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது .
    இதற்கு முக்கிய காரணம் அங்குள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் திரு ராஜேந்திர ரத்னு அவர்களின் அதிரடி நடவடிக்கை .அது மட்டுமல்லாமல் அங்குள்ள மக்களும் முக்கிய காரணம் .குறிப்பாக கிராமங்களில் வசிக்கும் மக்களிடம்கூட பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நன்றாக உள்ளது .எந்த ஒரு நல்ல திட்டமும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே செயல்படுத்த முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம் .
    எனினும் பேருந்துகளில் பயணிக்கும்போது குமரி மாவட்டத்தில் ஆங்காங்கே பிளாஸ்டிக் பைகள் தென்படுகின்றன .இது குறித்து அங்குள்ளவர்களிடம் வினவியபோது ,கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு நன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது .ஆனால் அருகிலுள்ள நெல்லை மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு உள்ளதால் அங்கிருந்து வருபவர்கள் மூலமாக இங்கும் பிளாஸ்டிக் கழிவுகள் வந்துவிடுகின்றன என்று கூறினார்கள் .
     எனவே தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் பொது மக்கள் குமரி மாவட்டத்தை பின்பற்றி தமிழகத்தின் சுற்றுசூழலை வளப்படுத்தவேண்டும் .

                                  பலே கன்னியாகுமரி மாவட்டம்!

07 மே 2011

புதிய மின் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு சாதனை !

      இதை பார்த்தவுடன் தமிழக அரசை கிண்டல் செய்வதற்காக எழுதப்பட்டதாக தோன்றும் .ஆனால் உண்மையிலேயே தமிழக அரசு செய்த அந்த சாதனயைத்தான் சொல்லப்போகிறேன் .
       ஆனால் இந்த சாதனை சமீபத்தில் நிகழ்ந்தது அல்ல 1954 ம் வருடத்திற்கும் 1963 ம் வருடத்துக்கும் இடையே நிகழ்த்தப்பட்ட சாதனை .இப்போது அநேகருக்கு புரிந்திருக்கும் .ஆம் தன்னலமில்லா தலைவர் பெருந்தலைவர் காமராஜ் ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனை .
        அந்த கால கட்டத்தில் தமிழக அரசின் ஆண்டு வருமானமே 50 கோடிக்கும் குறைவுதான் .ஊழலில்லாமல் ஆட்சி புரிந்தால் என்னென்ன சாதனை நிகழ்த்தலாம் என்பதற்கு இன்றும் உதாரணமாக திகழ்வது காமராஜ் நிறைவேற்றிய  திட்டங்கள்தான் .

இப்போது காமராஜ் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மின் திட்டங்கள் பற்றிய ஒரு பார்வை .

1 . குந்தா நீர் மின் திட்டம் (26 கோடி )
2 .பெரியாறு மின் திட்டம் (10  கோடி )
3 .கும்பார் -அமராவதி மின் திட்டம் (8  கோடி)
4 .மேட்டூர் கீழ்நிலை மின் திட்டம் (12 கோடி )
5 .மோயாறு நீர்மின் திட்டம்
6 .கூடலூர் நீர் மின் திட்டம்
7 .நெய்வேலி அனல் மின் திட்டம்
8 .சமயநல்லூர் அனல் மின் நிலையம்
9 .சென்னை அனல் மின் நிலையம்
10 .கல்பாக்கம் அணு மின் நிலையம் .



       இந்த பத்து மின் திட்டங்களும் காமராஜ் ஆட்சி காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டு அவரது ஆட்சியிலேயே முடிக்கப்பட்டது மேலும் சாண்டியனல்லூர் நீர் மின் திட்டம் ,குந்தா திட்டத்தின் மூன்றாவது பிரிவு,பெரியார் திட்டத்தின் இரண்டாவது பிரிவு ,பரம்பிக்குளம் .ஒக்கேனக்கல் ,பாண்டியாறு ,புன்னம்புழா ,சுருழியாறு ,பரளியாறு ஆகிய நீர் மின் திட்டங்கள் காமராஜ் ஆட்சி காலத்தில் தீட்டப்பட்டு பின்னர் நிறைவேற்றப்பட்டது .
            இதில் இனொன்று கவனிக்க தக்க விஷயம் அவர் செயல் படுத்திய பெரும்பாலான மின் திட்டங்கள் சுற்று சூழலுக்கு பாதிப்பில்லாதவை .
      காமராஜ் ஆட்சிக்கு வருவதற்கு முன் 160  மெகா வாட்டாக இருந்த மின் உற்பத்தி அவரது ஆட்சி முடிகையில் 600  மெகா வாட்டாக உயர்ந்திருந்தது .மிக குறைந்த வருவாயை கொண்டே காமராஜ் இத்தனை திட்டங்களை நிறைவேற்றியுள்ளார் என்றால் இப்போதுள்ள அரசியல் வாதிகளுக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம் தெரியும் .

                                         ம்ம்ம்ம் ....அந்த நாள் மீண்டும் வருமா..?

05 மே 2011

சமச்சீர் கல்வி 8 ம் ,9 ம் வகுப்பு பாட புத்தகங்கள் இலவச டவுன்லோடு !

     தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில்  10 ம் வகுப்பிற்கான பாட புத்தகங்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது .தற்போது  9 ம் வகுப்பு மற்றும் 8 ம் வகுப்பிற்கான பாட புத்தகங்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது .இதை அனைவரும் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் .பாட புத்தகங்களை டவுன்லோடு செய்யஇங்கே click செய்யவும் .
       

02 மே 2011

அட்டகாசமான ஐந்து தமிழ் வலை தளங்கள்!

இந்த பதிவில் அனைவரையும் கவரும் வகையில் விளங்கும் ஐந்து தமிழ் வலை தளங்களை  பகிர்கின்றேன் .
         

1.முதலில்சாப்பாடு. நீங்கள் காணப்போகும் இத்தளத்தில் எண்ணற்ற சமையல் குறிப்புகளை சிறந்த சமையல் நிபுணர்களை கொண்டு வழங்கியிருக்கிறார்கள் .சைவம் ,அசைவம் ,டயட் என அனைத்து பிரிவுகளும் உள்ளன .இவை அனைத்தையும் ருசித்து மகிழ இங்கே சுட்டுங்கள்
        
  
2 .அடுத்தபடியாக அனைத்து துறை சார்ந்த கட்டுரைகளை உள்ளடக்கிய தளம் .மேலும் பல்வேறு விஷயங்கள் இங்குள்ளன .திரை நாயகர்கள் ,நாயகிகள் படங்கள் நல்ல தரத்தில் பார்த்து மகிழ இங்கே சுட்டவும் .
       
3.அடுத்தபடியாக ஒரு மிகச்சிறந்த செய்தி பகிர்வுத்தளம் .இந்த தளத்திற்கு சென்றால் செய்தி தாள்களுக்கான இணைய தளங்களை தேடி அலையவேண்டியது இல்லை .அனைத்து பத்திரிகைகளுக்குமான இணையதள இணைப்பு இத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது .இதற்கு  இங்கே சுட்டவும் .
     
4.அடுத்து தமிழ் நாவல் பிரியர்களுக்கு ஓர் பயனுள்ள வலைப்பூ .தமிழில் பிரபலமான அத்தனை நாவல்களையும் இங்கே பதிவிறக்கம் செய்ய முடியும் .மேலும் பல்வேறு பயனுள்ள தகவல்கள் உள்ளன .வலைபூவிற்கு செல்ல இங்கே  சுட்டவும் .
  
5.அடுத்து  செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஒரு சிறந்த தளம் இங்கே.