31 ஜூலை 2011

காஃபியை விட டீ சிறந்தது என்பதற்கு ஐந்து காரணங்கள் .

நன்றி : லாரி ஜெங்கின்ஸ் ,நேக்டு ஹெல்த்
காபியும் டீயும் நம் அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத இரு உணவுப் பொருட்களாக விளங்குகின்றன .சிலருக்கு காபி ,சிலருக்கு டீ ,மற்றும் சிலருக்கு இரண்டுமே பிடிக்கிறது .பல்வேறு வகைகளில் காஃபியையும் டீயையும் ஒப்பிட்டு பார்கின்ற வேளையில் காஃபியை விட டீயே சிறந்தது என கருத வேண்டியுள்ளது .அதற்கான ஐந்து காரணங்கள் இதோ .

30 ஜூலை 2011

பேசும் நாய்கள் : காமெடி காணொளி !

1 .இரு நண்பர்கள் ,இவர்களுக்கிடையே ஏதோ தகராறு காணொளியை பார்த்துவிட்டு  உங்களால்  முடிந்தால் அவற்றை சமாதானம் செய்யுங்கள் .

நீங்கள் பிறந்த தமிழ் அல்லது ஆங்கில தேதியை அறியவேண்டுமா ?

நம்மில் சரியான பிறந்த தேதியை அறியாதவர்கள் பலர் உள்ளார்கள் .

ஆச்சரியமாக உள்ளதா ?விஷயம் இதுதான் .

முன்பெல்லாம் பிறந்த தேதிகளை பெரும்பாலும்  தமிழ் முறைப் படியே குறித்து வைத்திருப்பார்கள் .ஜாதகங்களிலும் பெரும்பாலும் ஆங்கிலத்தேதி இல்லாமலிருக்கும் .உதாரணமாக சித்திரை 12 ,ஆவணி 20  இதுபோல .


இதன் காரணமாக பலருக்கு தாங்கள் பிறந்த ஆங்கிலத்தேதி தெரியாமலேயே இருக்கும் .

29 ஜூலை 2011

அரசனை நம்பி புருசனை கை விடாதே .

இது ஒரு பழமொழி என்பது அநேகமாக அனைவருக்கும் தெரிந்திருக்கும் .

பெரிய பொருள் ஒன்றுக்கு ஆசைப்பட்டு அதன் மூலம் இருக்கின்ற சிறிய பொருளையும் இழந்துவிடக்கூடாது என்ற சூழ்நிலைகளில் இந்த பழமொழியை பலரும் பயன்படுத்துகிறார்கள் .

ஆனால் இது தவறு .இதன் பொருளே வேறு .

இந்த பழமொழிக்குப் பின்னால்  ஒரு பெரிய செயலை உணர்த்தும் ஒரு சிறிய சம்பவம் உள்ளது .

நடந்தது இதுதான் .

28 ஜூலை 2011

எச்சரிக்கை : நீங்கள் உளவு பார்க்கப் படுகிறீர்கள் !

உலகம் முழுவதும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன .குற்றம் புரிபவர்கள் பல நவீன உக்திகளை கையாளுவதால் அவர்களை கண்டு பிடிக்கவும் பல நவீன வசதிகள் வந்துள்ளன .
இவற்றில் முக்கியமானவை இரகசிய கேமராக்கள் .
நல்ல காரியங்களுக்கு பயன்படும் இக்கேமரா சில தீயவர்களாலும் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது .இது குறித்து எச்சரிக்கவே இப்பதிவு .

26 ஜூலை 2011

சுகமாக வாழும் உரிமை மக்களுக்கு இல்லை : அணுசக்தி துறை

ஜப்பானில் கடந்த 11-3-2011 அன்று நிகழ்ந்த   பூகம்பத்தால் அணு விபத்து ஏற்பட்டு லட்ச்சக்கணக்கான மக்கள் ஊரை காலி செய்து விட்டனர் .


விபத்து நிகழ்ந்து 4  மாதங்களாகியும் கதிர் வீச்சின் அளவு குறைந்த பாடில்லை .

24 ஜூலை 2011

இதைப் பார்த்து தலைவலி வந்தால் நான் பொறுப்பல்ல !

கீழே மூன்று படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன .இது gif image அல்ல சாதாரணமான jpeg படம்தான் .

இந்த மூன்று  படங்களையும் கிளிக் செய்து பெரிதாக்கிப் பாருங்கள் ,ஒரு ஆச்சரியம் இருக்கிறது .

23 ஜூலை 2011

செல்லப் பிராணிகளுக்கு ஆபத்தான ஆறு உணவுகள் !

நம்மில் பலர்  வீடுகளில் செல்லப் பிராணிகளை  குழந்தைகளுக்கு நிகராக அன்புடன் வளர்க்கிறோம் .பலர் தாங்கள் சாப்பிடும் உனாவுப் பொருட்களை செல்லப் பிராணிகளுக்கும் கொடுப்பதுண்டு .


இவற்றில் சில செல்லப்பிராணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவன   என்பது உங்களுக்கு தெரியுமா ?

உலகிலேயே பெண்களுக்கு அதிக ஆபத்தான ஐந்து நாடுகள் !

என்று  ஒரு பெண் இரவில் தனியாக ஊருக்குள் நடமாட முடிகிறதோ அன்றுதான் நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் என்றார் தேசப்பிதா .


பெண் நல சிந்தனைகள் பேச்சில்தான் இருக்கிறது ,ஆனால் நாளுக்கு நாள் பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறார்கள் .இந்நிலை  பல நாடுகளிலும் உள்ளது .

சமீபத்தில் போஸ்டன் நாளிதழில் உலகிலேயே பெண்களுக்கு அதிக தீங்கிழைக்கும் சில நாடுகளின் பட்டியல் வெளியானது .இப்போது அது உங்கள் பார்வைக்கு .

1 .ஆப்கானிஸ்தான்


பெண்களுக்கெதிராக அதிக வன்முறைகள் நிகழும் நாடு .மோசமான பொருளாதார சூழ் நிலைகள் சுகாதார சீர்கேடு போன்றவற்றால் இங்குள்ள பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் .

2 .காங்கோ


உலகிலேயே பாலியல் வன்முறைகள் அதிகம் நிகழும் நாடு .ஒவ்வொரு வருடமும் 4  லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள் .

3 .பாகிஸ்தான்


மத ரீதியான வன்முறைகள் ,திராவகம் வீச்சு பெண்கள் மீது நிகழ்த்தப்படுகிறது .குழந்தை திருமணங்கள் அதிகம் நிகழ்கின்றன .

4 .இந்தியா

பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் கடத்தப் படுகிறார்கள் .கடந்த நூற்றாண்டில்  பாலியல் தொழிலுக்காக மட்டும் 50  லட்சம் பெண்கள் கடத்தப்பட்டுள்ளார்கள் இவர்களில் 40  சதவீதம்பேர் பருவ வயதை எட்டாதவர்கள் என்பது இன்னும் வேதனையான விஷயம் .

5 .சோமாலியா



பெண்களுக்கெதிராக அதிக பாலியல் வன்முறைகள் நிகழ்கின்றன .பெண் கல்வி ,சுகாதாரம் மிகவும் குறைவாக உள்ள நாடு .

பெண்களுக்கெதிரான இந்த தீமைகள் குறைந்தால்தான் உலகம் செழிக்கும் .

21 ஜூலை 2011

பாகிஸ்தானின் இளம் (பெண் )அமைச்சர் !

நெருக்கடிக்கு மேல் நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கிறது பாகிஸ்தான் .சமீப காலமாக உலக நாடுகள் அனைத்திடமும் கெட்ட பெயரை சம்பாதித்து வருகிறது.

இதை சமாளிக்கும் வகையில் ஒரு அதிரடித்திட்டத்தை தீட்டியுள்ளது பாகிஸ்தான் .அதன் படி ஹினா ரப்பானி என்ற  ஒரு அழகிய இளம்பெண்ணை அதனுடைய வெளியுறவு அமைச்சராக்கியுள்ளது .

பாகிஸ்தான் வரலாற்றில் இவர்தான் மிகவும் இளம் வெளியுறவு அமைச்சர் .
 


எப்படித்தான்  சமாளிக்கப்போறேனோ .....
கொஞ்சம் பயமாத்தான்   இருக்கு

20 ஜூலை 2011

நியூயார்க் போலீஸ் வாணவேடிக்கை : வீடியோ

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்குள் விழாக்களில் பயன்படுத்தும் வெடிகளை விற்பதோ ,வாங்குவதோ தடை செய்யப்பட்டுள்ளது .

தடையை மீறி விற்கப்பட்ட பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான வெடிகளை நியூயார்க் நகர காவல் துறையினர் பறி முதல் செய்து அழித்தனர்.

மூன்றாயிரம் கிலோ எடையுள்ள வெடிகள் ஒரே இடத்தில் கொட்டப்பட்டு அழிக்கப்பட்ட காணொளி .

எச்சரிக்கை : பாதுகாப்பாக நின்றுகொண்டு காணொளியை கண்டு ரசியுங்கள் .

19 ஜூலை 2011

2307 TV சேனல்கள் இலவசமாக கண்டுகளிக்க!

ஆன் லைனில் தொலைகாட்சி சானல்களை கண்டுகளிக்க பல்வேறு இணைய தளங்கள் உள்ளன .இவற்றில் தனிச்சிறப்பு மிக்கதாய் இத்தளம் விளங்குகிறது .

இத்தளத்தின் வாயிலாக பல்வேறு நாடுகளிலிருந்து ஒளிபரப்பாகும் 2307  சேனல்களை நேரடியாக  இலவசமாக கண்டுகளிக்க இயலும் .

இன்னொரு சிறப்பு குறைவான வேகம் கொண்ட இன்டர்நெட் இணைப்புகளில் கூட தடங்கலின்றி காண முடிகிறது .

இதில் இடம்பெற்றுள்ள சில குறிப்பிடத்தக்க சேனல்கள் BBC,CNN,TIMES NOW,NDTV, CNN IBN , NHK  WORLD  போன்றவை .


தளத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள் .

அதி அற்புதமான ஐந்து ரோபோக்கள் :வீடியோ

மனிதனால் இயலாத சில வேலைகளை செய்ய ரோபோக்கள் உருவாக்கப்படுகின்றன.ஜப்பான்நாட்டில் இவை பலரால் பயன்படுத்தப் படுகின்றன.இவற்றில் சிறந்த ஐந்து ரோபோக்களின் காணொளிகள் இங்கே .

1.BIG DOG

இது ஒரு அற்புதமான கண்டு பிடிப்பு .மிகவும் உறுதியான கால்களை கொண்டது. பனிப்பரப்புகள்,மற்றும் மனிதன் ,வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்கு செல்ல வல்லது .




2.ROBAMA

இது ஒரு தானியங்கி வேக்குவம் கிளீனர் .மேடு பள்ளமான இடங்களை அதுவே கண்டுணர்ந்து சுத்தம் செய்யக்கூடியது .



3.AIBO

சோனி நிறுவனத்தின் அற்புதமான கண்டு பிடிப்பு .மனிதன் பேச்சுக்கு செவி சாய்த்து அதற்கேற்றார் போல் செயல் படக்கூடியது .



4.QRIO

இதுவும் சோனியின் தயாரிப்புதான் .பேச்சு மற்றும் உடலசைவு மூலம் கொடுக்கப்படும் கட்டளைகளுக்கு பணிகிறது .பாட்டுக்கு நடனமாடவும் முடியும் ..குழந்தைகளை கவர்ந்தது .



5.ASIMO

ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்பு .இது கிட்டத்தட்ட மனிதனாகவே செயல்படுகிறது .



டிஸ்கி : சரி ...இதனால நமக்கு என்ன பிரயோஜனம்ன்னு கேக்குறீங்களா? அதையேதான் நானும் கேக்கிறேன் உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்க .ஹி ..ஹி ...

18 ஜூலை 2011

பதிவிடுதலால் மரணத்தை வென்ற பெண் :உண்மை சம்பவம்

இந்நாட்களில் புற்று நோய் தாக்கிவிட்டது என்பதை அறிந்ததுமே  இனி வாழ்க்கை அவ்வளவுதான் என்று  பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கையிழந்து  சோகத்தில் உறைந்துவிடுகின்றனர்.

17 ஜூலை 2011

Top 10 Firefox நீட்சிகள் 2011 (பாகம் 1 )

இணைய பாவனையாளர்களுக்கு Firefox  ன் பல்வேறு நீட்சிகள் மிகவும் உபயோகமாக உள்ளன .2011  ஆம் ஆண்டின் சிறந்த 10  நீட்சிகள் உங்கள் பார்வைக்கு .

16 ஜூலை 2011

உலகின் மிகச்சிறந்த எதிர்க்கட்சி தலைவர் !

முக்காலத்திலும் யாரும் செய்ய முடியாத நல்லாட்சியான ஒன்பது ஆண்டு கால காமராஜர் ஆட்சி ஹிந்தி எதிர்ப்பு புயலில் சிக்கி சிதைந்தது .

அண்ணா இப்போது புதிய முதல்வராகிவிட்டார் .ஒரு மாதம் கடந்தது ....வழக்கம் போல பத்திரிகையாளர்கள் காம ராஜரிடம் அண்ணா ஆட்சி எப்படியுள்ளது என்று கேட்டனர் .

தம்பி ,அவர் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம்தானே ஆகிருக்கு ...நான் எந்தெந்த கோப்புகளை எங்கெங்கே வச்சிருக்கேன்கிரத கண்டு பிடிக்கிரதுக்கே அவருக்கு ஆறு மாதமாகும் ...அப்படி இருக்கும்போது எப்படி அவரோட ஆட்சி பத்தி கருத்து சொல்ல முடியுன்னேன் என்றார் காமராஜர் .

தற்போதுள்ள அரசியல்வாதிகளோ  தேர்தல் முடிந்த அடுத்த நாளே புதிய ஆட்சியை குறை கூற ஆரம்பித்து விடுகிறார்கள் .இவர்கள் தோல்வியை ஒரு போதும் ஏற்றுக்கொள்வதில்லை .

அண்ணா முதலமைச்சராக இருந்த போது புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அமெரிக்கா சென்றார் .அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரிச்சர்ட் நிக்சனை சந்திக்க அண்ணா விரும்பினார் .ஆனால் நிக்சனோ அண்ணாவை சந்திக்க தாம் விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.அண்ணாவுக்கு இது பெரிய ஏமாற்றம் .

சில மாதங்கள் கழித்து இந்தியாவிற்கு வந்த நிக்சன் காமராஜரை சந்திக்க விரும்புவதாக அழைப்பு விடுத்தார் .

"ஒரு தமிழன் அமெரிக்காவுக்கு வந்து சந்திக்க விரும்புனதுக்கு முடியாதுன்னு சொன்னவன நான் ஏன் சந்திக்கனும்ன்னேன்" என்று அமெரிக்க அதிபரை சந்திக்க மறுத்துவிட்டார் பச்சை தமிழர் பெருந்தலைவர் காமராஜர் .

இவரல்லவா உலகின் சிறந்த எதிர் கட்சி தலைவர் .நேற்று இப்பெருந்தலைவரின் பிறந்த நாள் .

15 ஜூலை 2011

நூறாவது பதிவுலக நண்பர் :நண்பேண்டா தொடர் பதிவு

பதிவுலகத்தில் எதேச்சையாக நுழைந்த எனக்கு இன்று ஒரு நம்ப முடியாத நாள் .   

நான் வெப்சைட் வைத்திருக்கிறேன் என்று நண்பர்களிடம் பீலா விடுவதற்காக ஆரம்பித்ததுதான் இந்த பிளாக் .


ஆரம்பித்து ஆறு மாதங்களில் வெறும் ஐந்து இடுகைகளை மட்டுமே இட்டேன் ...அதுவும் வெற்று இடுகைகள் .

நான் அதிகாரப்பூர்வமான ( ஹி..ஹி ...வேறு வார்த்தை தெரியவில்லை ) பதிவரானதற்கு காரணம்  ஜப்பான் பூகம்பம் .

ஆச்சரியமாக இருக்கிறதா ....உண்மைதான் .ஜப்பான் பூகம்பத்தால் ஏற்பட்ட சுனாமியால் அணு உலைகள் வெடித்து சிதறின .அதைத் தொடர்ந்து அணு உலைகள் உலகிற்கு அவசியமா என்னும் விவாதம் பதிவுலகில் நடமாடியது .

அணு உலைகளுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் அடிக்கடி பங்கு கொள்பவன் என்பதால் அது பற்றிய பிற பதிவர்களின் இடுகைகளில் எனது கருத்துக்களை கூறி வந்தேன் .

அப்போது ஒரு பதிவருக்கும் எனக்கும் கருத்து மோதல் வந்தது .மிகவும் மோசமான சூழ்நிலைகளில் மட்டும் கோபப்படும் எனக்கு அப்போது கோபம் வந்தது .

அதன் காரணமாக அணு உலைகளுக்கு எதிரான கருத்துக்களை உதாரணங்களுடன் பதிவிட ஆரம்பித்தேன் .

இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை எல்லா விஷயங்களைப்பற்றியும் திடீரென பதிவிட ஆரம்பித்துவிட்டேன் .சில நாட்களாக தேடுவாரற்று இருந்த எனது பிளாகை ஒவ்வொருவராக ஆதரிக்கத்தொடங்கினர்..
 
நம்பவே முடியவில்லை எனக்கு இன்று பதிவுலகில் நூறு நண்பர்கள் .

இதற்கு வந்தாரை வாழ வைக்க மட்டுமே கற்றிருக்கும் பதிவர்கள் அனைவரும் காரணம் .



நன்றிக்கடனாக நானும் என்னாலியன்ற ஆதரவினை பிற பதிவர்களுக்கு அளித்து வருகிறேன் .பதிவுலக நண்பர்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொரு விதத்தில் என்னை கவர்ந்தவர்கள் .

இந்த நட்பு தொடரும் 

அனைவருமே நண்பர்களாக இருப்பது   பதிவுலகத்தில் மட்டுமே சாத்தியம் என்று நினைக்கிறேன் .

புதிய நண்பர்களை பாசத்துடன் வரவேற்கிறேன் .

நண்பேண்டா தொடர் பதிவை எழுத என்னை அழைத்த நிரூபனுக்கு நன்றி .


நண்பேண்டா தொடர்பதிவை இதுவரை எழுதாத  அனைத்து பதிவர்களையும் இதன் மூலம் அழைக்கிறேன்

14 ஜூலை 2011

பறக்கும் அதிசய மனிதன் ! : காணொளி

பல்வேறு வகையான விமானங்களில் பலரும் பறப்பதை நாம் கண்டிருக்கிறோம் .

ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஈவ்ஸ் ரோஸி என்கின்ற இந்த வீரர் ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளார் .ஒரு இயந்திரம் பொருத்தப்பட்ட இறக்கையை தனது உடலில் பொருத்திக்கொண்டு 3000  அடி உயரத்தில் 200  மைல் வேகத்தில் பறந்து சாதனை படைத்துள்ளார் .

யாரும்  செய்ய தயங்கும் இந்த பயங்கரமான முயற்ச்சியை செய்து சாதித்துள்ளார் .தான் இதன் மூலம் பறக்கும்போது ஒரு பறவையை போல உணர்வதாக அவர் கூறினார் .எதிர் காலத்தில் இது மிகவும் உபயோகமுள்ளதாக இருக்கும் எனவும் கூறினார் .

மயிர் கூச்செறிய வைக்கும் அந்த சாதனையின் காணொளி .

13 ஜூலை 2011

பில் கேட்சின் ஐந்து ரகசியங்கள் :அவரே சொன்னது

பில் கேட்ஸ் சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தனது பெர்சனல் தகவல்களை வெளியிட்டுள்ளார் .அதில் குறிப்பிடத்தக்க ஐந்து தகவல்கள் .
ரகசியம் 1: அவருடைய மூன்று குழந்தைகள் தலா 15,12,9 வயதுடையவர்கள் .அடிக்கடி அவரை பார்த்து பில்லியனர் என்ற Travie McCoy ன் பாடலை பாடி கேலி செய்கிறார்களாம் .

அடிஷனல் ரகசியம்  : இதற்க்கு பதிலடியாக யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்ற பாடலை பாட பயிற்சி செய்து வருவதாக ஒரு தகவல் உள்ளது

ரகசியம் 2 : இது வரை பல்வேறு திட்டங்களுக்காக 12 ,000 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்

அடிஷனல் ரகசியம்  : அடுத்த எலெக்ஷன்ல செலவழிக்க நன்கொடை குடுத்தா ஆட்சிக்கு  வந்ததும் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டமும் ,கலியுக கர்ணன் பட்டமும்  கொடுத்து  கவுரவிக்க விருப்பதாக தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவரின் வாரிசு தெரிவித்துள்ளார் .


ரகசியம் 3 : ஒரே ஒரு twitter  account  உள்ளது. இருக்கின்ற ஒரே ஒரு Facebook  account  ல் நண்பர் வேண்டுதல்கள் எல்லை மீறி போய்விட்டதால் சரியாக வேலை செய்வதில்லை

அடிஷனல் ரகசியம் : தமிழ் நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் ஒரு பதிவர் மட்டும் ஆயிரம் அழைப்புகளை அனுப்பி பில் கேட்சை வெறுப்படைய வைத்துவிட்டாராம்


ரகசியம் 4 : புற்று நோய்க்கு உதவ பல அமைப்புகள் இருப்பதால் மலேரியாவை ஒழிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்

அடிஷனல் ரகசியம் : மருத்துவக்காபீட்டுத் திட்டத்துக்கும் உதவ கேட்க அமெரிக்காவிற்கு விரைவில் அம்மா ஆள் அனுப்புள்ளதாக அம்மாவின் உண்மை விசுவாசி தெரிவித்துள்ளார்


ரகசியம் 5 : சில முக்கியமான நபர்கள் கூட நான் யார் என்பதை சரிவரத்தெரியாமல் இருக்கிறார்கள் .சமீபத்தில் இந்தியாவில் ஒரு முதலமைச்சர் தம்மை அவருடைய நண்பர்களுக்கு இவர் எனது வெள்ளை கார நண்பர் என்று மட்டும் சொல்லி அறிமுகப்படுத்தினாராம் .

அடிஷனல் ரகசியம் :குறிப்பிட்ட ஒரு ஒப்பந்தத்திற்கு கமிஷன் வழங்க மறுத்ததாலேயே அவரை அவ்வாறு கூற நேரிட்டது என்று அந்த முன்னாள் முதல்வரின் முன்னாள் உதவியாளர் தெரிவித்துள்ளார்

நன்றி :Mashable

12 ஜூலை 2011

கற்களாக மாறிய தங்க காசுகள் !

ஒரு பெரிய செல்வந்தன் இருந்தான் .ஆனால் சரியானகஞ்சன்.யாருக்கும் ஐந்து பைசாகூட 
உதவி செய்யமாட்டான் .

சேனல் 4 வீடியோ : நிருபமா சொல்வது நியாயமா ?

இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்கள் தொடர்பான காணொளிகளை சேனல் 4 ஒளிபரப்பியதன்மூலம் இலங்கை அரசின் முகத்திரை கிழிந்தது .

அதனைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளும் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன .இருந்தபோதிலும் இந்திய ஊடகங்கள் இது பற்றி அமைதி காத்து வந்தன .

இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்தியா டுடே செய்தி நிறுவனத்தின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி சேனல் 4 வீடியோக்களை அடிக்கடி ஒளிபரப்பி வருகின்றது .இது தற்போது டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது .

இது குறித்து கருத்து தெரிவித்த பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நட்டா இலங்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் இந்திய அரசு இலங்கை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கருத்து தெரிவித்தார் .

இந்த வீடியோ குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவிடம்  செய்தியாளர்கள் கேட்டபோது இது பற்றி இப்போதைக்கு கருத்து எதுவும் தெரிவிக்க இயலாது என்று கூறியுள்ளார் .

இலங்கையில் போர்குற்றம் நடந்தபோதோ அதை சேனல் 4  ஒளிபரப்பியபோதோ வாய் திறக்காத காங்கிரஸ் அரசு தற்போது அதை நேரடியாக காண்கின்ற போதும் வாய்திறக்க மறுப்பது கண்டனத்திற்குரியது .


இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா கருத்து தெரிவிக்கையில் காங்கிரஸ் அரசின் இச்செயல் கண்டிக்கத்தக்கது எனவும் இதன் மூலம் ஐ நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராகும் தகுதியை இந்தியா இழந்துவிட்டது எனவும் கூறினார் .

11 ஜூலை 2011

ஒரே நேரத்தில் பல G MAIL ACCOUNT களை பயன்படுத்த நீட்சி !

மின்னஞ்சல் வசதிக்கு இன்று பலரும் GMAIL  பயன்படுத்துகிறார்கள்.சிலருக்கு gmail ல் ஒன்றுக்கும் மேற்பட்ட ACCOUNT  கள் இருக்கும் . 

சாதாரணமாக ஒரு ACCOUNT  மூலம் LOGIN  செய்துவிட்டு அதை SIGNOUT  செய்யாமல் இன்னொரு ACCOUNT ஐ பயன்படுத்த இயலாது .

பல படங்களை ஒரே கிளிக்கில் RE SIZE ,RENAME செய்ய இலவச மென்பொருள் !

தற்போது நாம் டிஜிட்டல் கேமராக்கள் மூலமாக எடுக்கும் புகைப்படங்கள் அளவில் பெரியதாக இருக்கும் .இவற்றை மின்னஞ்சல் மூலமாக பிறருக்கு அனுப்புவதற்கோ அல்லது முகநூல் ,வலைபூக்களில் பகிர்வதற்கோ சிரமமாக இருக்கும் .

இவற்றின் அளவை குறைப்பதன் மூலம் கையாளுவதற்கு எளிதாக இருக்கும் .படங்களை RESIZE  செய்ய பல மென்பொருட்கள் உள்ளன .

இந்த மென்பொருளில் உள்ள சிறப்பு ஒரு FOLDER  ல் உள்ள படங்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் தேவையான அளவில் RESIZE  செய்து தேவையான இடத்தில் சேமிக்கலாம் .மேலும் ஒரு FOLDER  ல் உள்ள படங்களின் பெயர்களையும் ஒரே கிளிக்கில் மாற்றலாம் .

FastStone Photo Resizer என்ற இந்த மென்பொருள் ஒரு இலவச மென்பொருள்.அளவு மிக மிக குறைவு (1  MB ).பயன்படுத்துவதும் மிக எளிது. டவுன்லோடு செய்து பயன்படுத்த விரும்புபவர்கள் இங்கே சுட்டுங்கள்

10 ஜூலை 2011

இந்தியாவின் TOP 5 பணக்கார கோவில்கள்

சமீபத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள பாதாள அறைகள் திறக்கப் பட்டு அங்கிருந்த கற்பனைக்கெட்டாத பொக்கிஷங்கள் இன்று உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளது .

இந்தியாவிலுள்ள பணக்கார கோவில்கள் வரிசையில் முதல் 5  இடங்களை பிடித்திருக்கும் கோயில்களை பார்ப்போம் .

1.திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் 


108  வைணவத் திருத்தலங்களில் ஒன்றான இக்கோவிலின் இன்றைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட  2  லட்சம் கோடி .

2 .திருப்பதி வெங்கடேச பெருமாள் சுவாமி கோவில்


இக்கோவில் தனது கட்டிடத்திலேயே 1  டன் தங்கத்தை கொண்டுள்ளது.வருடத்திற்கு சராசரியாக 650  கோடிக்கு மேல் வருமானம் வருகிறது .தினமும் சராசரியாக 60000  பேர் சுவாமி தரிசனம் செய்ய வருகிறார்கள் .

3 .மகாராஷ்டிரா ஷிர்டி சாய்பாபா கோவில்




மும்பைக்கு அருகிலுள்ள இக்கோவிலில் 32  கோடி ரூபாய் அளவிற்கு தங்க நகைகள் உள்ளன .வருடத்திற்கு 350  கோடி அளவிற்கு வருமானம் உள்ளது

4 .மும்பை சித்தி விநாயகர் கோவில்



வருடத்திற்கு 48  கோடி ரூபாய் அளவிற்கு வருமானம் உள்ளது

5  .அமிர்தசரஸ் பொற்கோவில்


பஞ்சாபில் அமைந்துள்ள இக்கோவில் தங்கத்தால் கட்டப்பட்டுள்ளது.தினமும் 40000  பேர் தரிசனத்திற்கு வருகிறார்கள்

மும்பை :பிளாஸ்டிக் பையை ஒழிக்க சூப்பர் ஐடியா !

வளரும் நாடுகளில் சுற்று சூழல் பாது காப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது பிளாஸ்டிக் கழிவுகள் .இதில் முக்கிய பங்கு வகிப்பது மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பைகள் .

மும்பையிலுள்ள கடைகளில் ஒரு ரூபாய்க்கு பொருள் வாங்கினால்கூட அதை பிளாஸ்டிக் பையில்தான் கொடுப்பார்கள் .இதன் காரணமாக மும்பையில் பிளாஸ்டிக் கழிவுகள் பெருமளவில் தேங்க ஆரம்பித்து விட்டன.

இதை தடுக்க எத்தனையோ விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பயனில்லை.இதை சட்டம் போட்டு தடுக்கவும் இயலவில்லை .

இந்நிலையில் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை குறைக்க ஒரு அருமையான திட்டம் தீட்டப்பட்டுள்ளது .மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி இத்திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது .
 
இனி மும்பை கடைகளில் பொருட்களை கொண்டு செல்ல பிளாஸ்டிக் பை கொடுக்கமாட்டார்கள் .கண்டிப்பாக பை தேவையென்றால் அதற்கு தனியாக காசு கொடுக்கவேண்டும் .


2  கிலோ அளவிற்கு பொருள் வைக்ககூடிய  பைக்கு 1  ரூபாய் 
3  கிலோவிற்கு 2  ரூபாய் 
5  கிலோவிற்கு 3 ரூபாய் 
அதற்குமேல் 5  ரூபாய் 
மிகப்பெரிய பைக்கு 7 ரூபாய் தனியாக செலுத்தவேண்டும் .


இதன் காரணமாக பொருள் வாங்க வீட்டில் இருந்து பை கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் வர வாய்ப்பு உள்ளது.பிளாஸ்டிக் பயன்பாடும் குறிப்பிடத்தக்க அளவு குறையும் என எதி பார்க்கப்படுகிறது .


டிஸ்கி :தமிழ் நாட்டில் கன்னியாகுமரி  மாவட்டத்தில் மட்டும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை உள்ளது 

09 ஜூலை 2011

AK -47 சுடும் மனித குரங்கு :புதிய வீடியோ

குரங்கு கையில் பூமாலையை கொடுத்தால் எதற்கு ஆகும் என்று நாம் சொல்வதுண்டு .


ஆனால் இங்கே சிலர் பயங்கர ஆயுதமான AK-47 ஐ மனித குரங்கின் கையில் கொடுத்துவிட்டு உயிர் தப்ப போராடுகிறார்கள் .



டிஸ்கி : எது எது யார்கிட்ட இருக்கணுமோ அவுங்ககிட்டதான் இருக்கணும். இல்லாட்டி அவஸ்தைதான் .ரைட்டா ...

ஊரை தூக்கி கடலில் போடும் காணொளி !

டைட்டானிக் கப்பல் எவ்வளவு பெரியது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இன்றும் டைட்டானிக் கப்பலை விட பெரிய சொகுசுக்கப்பல்கள்  பல பயன்பாட்டில உள்ளன .

இவற்றை துறை முகங்களில் நாம் காணும்போது ஆச்சரியத்தில் மெய் மறந்து விடுவோம் .ஆனால் இவ்வளவு பெரிய கப்பலை தொழிற்ச்சாலைகளில் வடிவமைத்து கடலில் விடப்படுவது எப்படி என்பதை பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை .

08 ஜூலை 2011

சக்சஸ் .....ஹன்சிகா ஐ லவ் யூ சொல்லிட்டா ....




                உள்ள இறங்கு மாப்ள ஒரு குளியல் போட்டுறலாம் 

 

                           


                                 நான் இப்பத்தான் lkg  ல சேந்திருக்கேன் 

 

                                                         
                                                            என்னடா மொறைப்பு 

 
                       

               எப்படி ? கண்ணாடி போட்டுட்டு அழகா இருக்கேனா ?

 


 இதுக்கு மேல பேசுனீங்க ...அத்தனை பேரையும் பெட்ரோல்       ஊத்தி                   கொளுத்திடுவேன்  ஆமா 

 

                                         


                                                     ச்சீ  .......ஆசைய பாரு 

 

                           

                       மாப்ள நீ இனிமேல் எப்படி வேணும்னாலும் திட்டிக்க 

 
  ஹீரோவா ஆகணும்ன்னா நம்மள மாதிரி பெர்சனாலிட்டி வேணும்

 




இந்த பல்ல பாத்துதான் பல பொண்ணுங்க மயங்கியிருக்காங்க 

 



                                          ஏய் ...நீ ரொம்ப அழுக்கா இருக்க 

 



                              பான்பராக் கரைதான் வேற ஒண்ணுமில்ல 

 



நாக்கை நீட்ட சொல்றான் எப்படின்றத சொல்லி குடுக்க மாட்டேன்றான் 

 


                            சக்சஸ் .....ஹன்சிகா ஐ லவ் யூ சொல்லிட்டா ....