14 அக்டோபர் 2011

அணு உலைப் பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

கூடங்குளம் அணு உலை தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று கூறி கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார  ஊர்களில் வசிக்கும் மக்கள் கடந்த ஒரு மாதமாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் .

தமிழக அரசும் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து மக்கள் அச்சம் தீரும் வரை அணு உலைப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது .எனினும் மத்திய அரசு அதை கண்டுகொள்ளாமல் அணு உலையை செயல்பட வைக்க முனைப்பு  காட்டி வந்தது .

இந்நிலையில் இன்று திடீரென மக்கள்  வெகுண்டெழுந்து அணு உலைப் பணிகளை இனி தாங்களே நிறுத்துவது என முடிவெடுத்தனர் .
 

13 அக்டோபர் 2011

அணு உலைப் பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

கூடங்குளம் அணு உலை தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று கூறி கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார  ஊர்களில் வசிக்கும் மக்கள் கடந்த ஒரு மாதமாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் .

தமிழக அரசும் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து மக்கள் அச்சம் தீரும் வரை அணு உலைப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது .எனினும் மத்திய அரசு அதை கண்டுகொள்ளாமல் அணு உலையை செயல்பட வைக்க முனைப்பு  காட்டி வந்தது .

இந்நிலையில் இன்று திடீரென மக்கள்  வெகுண்டெழுந்து அணு உலைப் பணிகளை இனி தாங்களே நிறுத்துவது என முடிவெடுத்தனர் .

அதன் படி இன்று காலை சுமார் 9  மணியளவில் ஆயிரக்கணக்கானோர் அணு மின் நிலையம் முன்பு திரண்டனர் .அனைவரும் இணைந்து அணு உலைக்கு பணியாளர்கள் வரும் வாகனங்களை  திருப்பி அனுப்பினர் .

மேலும்  இரு சக்கர வாகனகளில் வருபவர்களையும் தடுத்து நிறுத்தி அணு உலையால் நம் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும் இனி நீங்கள் அணுமின் நிலைய வேலைகளை விட்டுவிட்டு வேறு வேலைகளுக்கு செல்லுங்கள் என்று அறிவுரை  கூறி அனுப்பி  வைத்தனர் .

இதன்காரணமாக அணு உலைப் பணிகள் முற்றிலும் தடை பட்டுள்ளது .

இதனிடையே இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொட முதல்வர் போராடும் மக்களில் தன்னையும் ஒருத்தியாக இணைத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார் .இது மக்களுக்கு  மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது .

அணு உலையை மூடிவிட்டுத்தான் வீடு திரும்புவோம்  என்று அணு மின் நிலையத்திற்கு அருகில் தங்கியுள்ள மக்கள் 

எனினும் மத்திய அரசிடமிருந்து தங்களுக்கு சாதகமான அறிவிப்பு வரும் வரையில்  அணு உலை அருகிலிருந்து அகலப் போவதில்லை என்று கூறி பெரிய பந்தல் அமைத்து சுமார் 3000 பெண்கள் உட்பட சுமார் 5000 அங்கேயே தங்கியுள்ளனர் .

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு உணவு தயாராகிறது 

இதன் காரணமாக அணு உலைப் பணிகளை நிறுத்தியே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு அரசு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது  .

மக்களின் இந்த  நியாயமான போராட்டம் வெற்றி பெற அனைவரும் உதவுங்கள் .

12 அக்டோபர் 2011

அணுஉலை : மக்களின் அச்சத்தை போக்க எளிய வழி !

கூடங்குளம் அணு மின் நிலையத்தை     மூடவேண்டும் என்று கோரி நெல்லை ,
குமரி,தூத்துக்குடி மாவட்ட மக்கள்          மிகத்தீவிரமாக போராடி வருகிறார்கள் .
ஆனால்     அரசோ       மக்களின்    அச்சத்தை    போக்குவோம் என்று கூறுகிறது .
ஆனாலும் எவ்வாறு அச்சத்தை போக்குவது என்று அரசு முடிவெடுக்கத் திணறி வருகிறது .

ஏதோ என்னால் இயன்ற வரையில் அச்சத்தை போக்குவதற்குரிய சில வழிகளை சொல்கிறேன் .

அச்சம் 1 :அணு உலை செயல்பட ஆரம்பித்தால் அருகில் வசிக்கும் மக்களுக்கு  புற்று  நோய் வரும் .

அச்சத்தை போக்க : அணுமின் நிலையத்திலிருந்து 10  கிலோமீட்டருக்கு அப்பால் கட்டப்பட்டிருக்கும் ஊழியர் குடியிருப்பை 3  கிலோமீட்டருக்குள் கொண்டுவரவேண்டும் .பயத்தை போக்க விரும்பும் அதிகாரிகள் நிரந்தரமாக கூடங்குளம் பகுதியிலேயே குடியேறவேண்டும் .

அச்சம் 2 :மீன்களுக்கு கதிரியக்க பாதிப்பு ஏற்படும் என்பதால் அதை வாங்க யாரும் முன்வர மாட்டார்கள் .

அச்சத்தை போக்க : அணுமின் நிலையத்தில் பணிபுரிவோர் அனைவரும் இப்பகுதியிலிருந்து பிடிக்கப்படும் மீன்களையே வாங்கி உண்ணவேண்டும் .வியாபாரிகள் மீன்களை வாங்க மறுத்தால் அரசே மீன்களை கொள்முதல் செய்துவிட்டு அதற்குரிய விலையை மீனவர்களுக்கு வழங்கவேண்டும் .

அச்சம் 3 : அணு உலை வெடித்தால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் 

அச்சத்தை போக்க : அணுமின் நிலையத்திலிருந்து 50  கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் வசிக்கும் சுமார் 18 லட்சம் மக்களை 24  மணி நேரத்தில் பாதுகாப்பாக வெளியேற்றியும் உடனடியாக இவர்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் .இதை மூன்று முறை ஒத்திகையாக நிகழ்த்தி காண்பிக்கவேண்டும் .

இதுபோல இன்னும் சில அச்சங்களும் அதற்கு தீர்வுகளும் உள்ளன .

ஆனால் இந்த எல்லா அச்சங்களையும் எளிதாக போக்க ஒரு சிறந்த வழி உள்ளது .அது அணு உலையை உடனடியாக மூடிவிடுவதுதான் .

விஸ்வாமித்திரர் யாகம் செய்த இடத்தில் மீண்டும் யாகம் !

ராஜரிஷி பட்டம் பெறுவதற்காக விஸ்வாமித்திரர் யாகம் செய்ததாகவும் அதற்கு ராமரும் ,லக்ஷ்மணரும் காவல் புரிந்ததாகவும் அதற்கு இடையூறு செய்த தாடகையை ராமர் வதம் செய்ததாகவும் புராணங்கள் வாயிலாக தெரிய வருகின்றன .

அவ்வாறு யாகம் செய்ததாக கூறப்படும் இடம் திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி  அருகிலுள்ள தில்லை வனம் தோப்பில் அமைந்துள்ளது .உலகிலேயே விஸ்வாமித்திரருக்கு இங்கு மட்டும்தான் ஆலயம் அமைந்துள்ளது .

இவ்வாலயத்தில் நேற்று (11-10-2011)  ஒரு யாகம் நடத்தப்பட்டது .

யாகத்திற்கான நோக்கம் கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி நடைபெறும் போராட்டம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக .

யாகத்தை கோயில் அர்ச்சகர் முத்துப்பட்டர் நடத்தினார் .கூடங்குளம் பகுதி மக்கள் பலர் இந்த யாகத்தில் கலந்து கொண்டனர் .சர்வமதத்தினரும் இதில் கலந்துகொண்டனர் .

 இவ்வாலயம் அணுமின் நிலையத்திலிருந்து 5  கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது .

11 அக்டோபர் 2011

கூடங்குளம் தொடர் போராட்டத்திற்கு காரணம் யார் ?உண்மை நிலவரம்

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது .இருப்பினும் அரசு தரப்பிலிருந்து மக்களுக்கு சாதகமாக உறுதியான பதில்கள் கிடைக்காததால் போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது .

இது மக்கள் போராட்டமாக இருந்தாலும் சில ஊடகங்களும் ,அணு உலை ஆதரவாளர்களும் இப்போராட்டம் மர்ம நபர்களால் தூண்டி விடப் படுகிறது என்று நடுநிலையாளர்களை திசை திருப்ப முயற்சி மேற்கொண்டு வருகின்றார்கள் .இப்போராட்டத்தில் கலந்துகொண்டவன் என்ற முறையில் உண்மை நிலவரத்தை உங்களுக்கு தருகின்றேன் .

கடந்த 11-9-2011 அன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டது .உண்ணாவிரதம் தொடங்கி 5  நாட்கள் கடந்த நிலையில் போராட்ட குழுவில் முக்கிய அங்கம் வகிக்கும் திரு உதயகுமார் உள்ளிட்ட போராட்டக்குழுவினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தோரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டனர் .அத்திட்டத்தை உண்ணாவிரதமிருந்த 127  பேரிடமும் நாசூக்காக தெரிவித்தனர்.

ஆனால் அக்கணமே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தோர் போராட்டக் குழுவினரிடம் அணு உலையை மூடுவதற்கு முன்பாக எக்காரணம் கொண்டும் உண்ணாவிரதத்தை கைவிடமாட்டோம் என்று மிகவும் கண்டிப்பாக கூறிவிட்டனர் .

அன்றைய தினம் தமிழக அமைச்சரவைக் குழுவும் போராட்டக் குழுவினரை சந்திக்க தாலுகா தலை நகருக்கு வந்திருந்தனர் .அதே வேளையில் அமைச்சர் குழுவை சந்திக்க போராட்டக்குழுவினர் முடிவு செய்வதற்கு போராட்டத்திற்கு வந்திருந்த பல்லாயிரக் கணக்கானோர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர் .அதற்கு காரணம் சரியான முடிவு கிடைக்காமல் போராட்டக்குழுவினர் போராட்டத்தை முடித்துவிடக்கூடாது என்பதால்தான் .

அணு உலையை மூட அமைச்சர் குழு உறுதி கூறாவிட்டால் பேச்சு வார்த்தையை நிராகரித்துவிடுவோம் என்று போராட்டக்குழுவினர் பொதுமக்களிடம் உருதியளித்தபின்புதான் பேச்சு வார்த்தைக்கு பொது மக்களும் ,உண்ணாவிரதத்தில் ஈடு பட்டிருந்தோரும் அனுமதித்தனர் .

பலரும் நினைப்பது போல் உதயகுமாரோ ,அல்லது ஆயர்களோ போராட்டத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது .இதற்கு காரணம் அணு உலையை மூடுவதற்காக எதையும் இழக்கத் துணிந்துள்ள பல்லாயிரக்கணக்கான கூடங்குளம் பகுதி மக்கள்தான் .

இவர்களை மீறி போராட்டக்குழுவினர் ஒரு பாதகமான முடிவை எடுத்தால் அது அவர்களுக்கே பெரிய பாதகமாக முடியலாம் .இதன் காரணமாகத்தான் தற்போது மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கப்பட்டுள்ளது .

தற்போது இப்பகுதி மக்களின் மன நிலை அணு உலையை மூடுவதற்கு முன்பாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரக்கூடாது என்பதுதான் .

டிஸ்கி : கடந்த மாதம் நடை பெற்ற 11 நாள்  உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டதால் எனது உடல்நிலை கடும் பாதிப்புக்குள்ளானதால் மருத்துவர் அறிவுரைப்படி ஓய்வெடுத்து வருகிறேன் .