ஏழரை லட்சம் கோடி .
மறுபடியும் ஊழலா என்று யாரும் நினைத்துவிடவேண்டாம் .இது புகுஷிமாவில் ஏற்பட்டுள்ள அணு உலை விபத்தினால் உண்டான பாதிப்புகளை சரி செய்ய ஆகும் செலவிற்கு ஜப்பான் அரசு உத்தேசித்துள்ள தொகை .
ஜப்பானின் புகுஷிமாவில் உள்ள அணுமின் நிலையங்களில் நிகழ்ந்த மோசமான விபத்தை கட்டுக்குள் கொண்டு வர ஜப்பான் அரசும் TEPCO நிறுவனமும் தீவிரமாக முயன்று வருகின்றன .
இந்நிலையில் ஜப்பான் பொருளாதார ஆராய்ச்சி மையத்தின் தலைவரான திரு கசுமசா எல்வாட்டா வெளியிட்டுள்ள செய்தியில் அணு உலை பாதிப்புகளை முற்றிலுமாக சரி செய்ய 10 வருடங்கள் ஆகும் எனவும் இதற்கு 250 பில்லியன் டாலர் அதாவது ஏழரை லட்சம் கோடி ருபாய் செலவாகும் என தெரிவித்துள்ளார் .
இந்தியாவை பொறுத்தவரையில் லட்சம் கோடியெல்லாம் பொதுமக்களுக்கு சாதாரணமாகிவிட்டது என்றாலும் பொருளாதார நிபுணர்களுக்குதான் அதன் உண்மையான மதிப்பு தெரியும் .


