11 ஜூன் 2012

பேரிடர் மேலாண்மை என்ற பெயரில் ஒரு பெரிய கேலிக்கூத்து!

பேரிடர் மேலாண்மையில் மிகவும் மோசமான நாடுகளின் பட்டியலைத் தேர்வு செய்தால் அதில் இந்தியாவுக்கு எப்போதுமே முக்கிய இடமுண்டு.

போபால் விஷ வாயுக் கசிவின் போதும்  சரி 2004  ம் ஆண்டு நடந்த சுனாமித் தாக்குதலின் போதும் சரி  பேரிடர் மேலாண்மை சரியாக இல்லாததால்தான்  பெரும் உயிரிழப்புகளை சந்திக்க நேர்ந்தது.

போபால் விஷ வாயுத் தாக்குதலின் போது மக்களைக் காப்பாற்றுவதை விட்டுவிட்டு விபத்திற்கு காரணமான வாரன் ஆண்டர்சனை பத்திரமாக தனது நாட்டுக்கு அனுப்பி வைத்தது அன்றைய காங்கிரஸ் அரசு.

ஏற்கெனவே பல்வேறு பேரிடர்களிலிருந்து  பாடம் கற்பதை விட்டுவிட்டு தொடர்ந்து தவறு செய்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளன நம் அரசுகள். 

சமீபத்தில் ஜப்பானில் ஒரு மிகப் பெரிய அணு உலை விபத்து நிகழ்ந்தது.அந்த நாடு பேரிடர் மேலாண்மையில் கொண்டிருந்த திறமையால் லட்சக்கணக்கான மக்கள் கதிர் வீச்சுத்  தாக்குதலில் இருந்து தப்பித்தனர்.


தற்போது மத்திய  அரசு நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியாவின் மிகப் பெரிய இரண்டு அணு உலைகளை செயல் படுத்தத் தயாராகி வருகிறது. அணு உலை எரி  பொருள் நிரப்புவதற்கு முன்னதாக இந்திய அணு சக்தி  ஒழுங்கு முறை ஆணையத்தின் விதி முறைகளின் படி அணு உலை அமைந்துள்ள பகுதி மக்கள் அனைவருக்கும் பேரிடர் பயிற்சி வழங்கவேண்டும் .

கூடங்குளம் அணு உலையை சுற்றி 30 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள்   10 லட்சம் பேருக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். ஆனார் இவர்களில் எவர் ஒருவருக்கும் தெரியாதபடி பேரிடர் மேலாண்மைப் பயிற்சி நடந்துள்ளது பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது .

கடந்த 9-6-2012   அன்று கூடங்குளம் அருகிலுள்ள 300 பேர் மட்டுமே வசிக்கும் நக்கநேரி  என்ற குக்கிராமத்திற்கு பேரிடர்    மேலாண்மை குழுவினர் சென்றுள்ளனர் அப்போது அங்கே பெரும்பாலானோர் கூலி வேலைகளுக்கு சென்றுவிட்டபடியால் சுமார் 100 பேர் மட்டுமே அவ்வூரில் இருந்துள்ளனர் . சேரன்மாதேவி உதவி ஆட்சியர் தலைமையில் போலிஸ் படையினருடன் சென்ற குழுவினர் அங்குள்ள மக்களிடம் மருத்துவ முகாம் நடத்த வந்திருப்பதாக கூறியுள்ளனர். அந்த பாமர மக்களுக்கு எதுவுமே விளங்காமல் இருந்திருக்கிறது.

இறுதியாக பலரிடம் கையெழுத்து பெற்றுள்ளனர். இச்செயல்கள் முடிந்ததும் கூடங்குளத்தில் பேரிடர் பயிற்சி வெற்றிகரமாக நடத்தப் பட்டுவிட்டதாகவும் , இனி யுரேனியம் நிரப்ப அனுமதி கிடைத்துவிடும் என்றும் கூறியுள்ளனர் அதிகாரிகள்.

கடந்த இரு மாதங்களுக்கு மேல் 144 தடை உத்தரவிற்குள் சிக்கித் தவிக்கும் கூடங்குளம் பகுதி மக்கள் மத்திய மாநில அரசுகள் கைகோர்த்தி செய்யும் இந்த அநியாயங்களை யாரிடம் முறையிடுவது என்று அறியாமல் திகைத்து வருகின்றனர்.

கூடங்குளத்துல விபத்து நடந்தா அவ்ளோதானா?

3 கருத்துகள்:

MARI The Great சொன்னது…

வர வர காங்கிரஸ் கவர்மெண்ட்டு நடவடிக்கைகள் "வடிவேலு" ஆக்சன் மாதிரி சிரிப்பா சிரிக்குது ..!

Unknown சொன்னது…

அரசாங்கத்தோட அடாவடி தாங்கல...இதுக்கிடையே நம்மாளுக என்னண்ணா அகிம்ச அகிம்சன்னு சொல்லி நேரத்த வீணடிச்சிகிட்டிருக்காங்க

மகேந்திரன் சொன்னது…

ஆள்வோர்களை இடித்துரைப்போர்
இல்லையென மன இறுக்கம்.....