12 ஜூலை 2013

திறமையான நீதிபதி யார் ?



நம் நாட்டில் பல்வேறு சிறிய மற்றும் பல  பெரிய வழக்குகள் நீதி மன்றத்தில் நடந்து வருகின்றன.... 

அயோத்தி பிரச்சினை காவிரி பிரச்சினை முல்லை பெரியாறு பிரச்சினை இன்னும் என்னென்னவோ பிரச்சினைகள்....

இப்பிரச்சினைகள் சம்மந்தமான வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. இந்த அனைத்து பிரச்சினைகளும் என்றாவது ஒரு நாள் தீர்த்து வைக்கப்பட்டுவிடும் . 

ஆனால் இதையெல்லாம் விட சிக்கலான பிரச்சினை ஒன்றுள்ளது. 

அதுதான் மாமியார் மருமகள்  இடையே உருவாகும் பிரச்சினை. 

எப்பேர்பட்ட நீதிபதியாக இருந்தாலும் இந்த பிரச்சினையில் மாட்டினால் சிக்கல்தான். 

ஆகவே கட்டிய மனைவிக்கும் பெற்ற தாய்க்கும் இடையே பிரச்சினை எழும்போது அதை தீர்க்க யாருக்கு திறமை உள்ளதோ அவர்தான் திறமையான நீதிபதி. 

இந்த போட்டிக்கு வர்றவுங்கல்லாம் கொஞ்சம் கைய தூக்குங்கண்ணே ....

16 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஹா... ஹா... இதுவும் சரிதான்...!

கூடல் பாலா சொன்னது…

@திண்டுக்கல் தனபாலன் சேம் பிளட்டா ???

கூடல் பாலா சொன்னது…

@திண்டுக்கல் தனபாலன் சேம் பிளட்டா ???

ராஜி சொன்னது…

கரெக்ட்தான். ஆனா, சொந்த அனுபவம் போல இருக்கு!!

ezhil சொன்னது…

இதுக்கு ஒரு தனி வகுப்பு எடுத்தாக்கூட தப்பில்லங்க...வாழ் நாள் முழுதும் பயன்படக்கூடியதில்லையா?

Unknown சொன்னது…


நல்ல கேள்வி!!!!

கூடல் பாலா சொன்னது…

@ராஜிஎப்படிங்க சகோதரி டக்குன்னு கண்டுபுடிச்சீங்க....

கூடல் பாலா சொன்னது…

@ezhilஎத்தனை வகுப்பு எடுத்தாலும் இது தேறக்கூடியதான்னு தெரியலைங்க....

கூடல் பாலா சொன்னது…

@புலவர் இராமாநுசம் வணக்கம் ஐயா!

ssk சொன்னது…

நீதியின் முன் எல்லோரும் சமம் அங்கு சொந்தம் , பந்தம் , ஏழை ,பணக்காரன் வித்தியாசம் இல்லை கடவுள் உட்பட. இன்பம் மற்றும் வலி என்ற இரண்டை பொறுத்தே சட்டம் உள்ளது (Bentam -Principles of legislation பார்க்கவும் ) ஆக இதில் ஒருவன் தனக்கு வேண்டிய இன்பம் (பொருள், .மன ... ..பல ) இனி யாரிடம் இருந்து கிடைக்க அதிக வாய்புள்ளதோ , அவர் வெற்றி பெற தீர்ப்பு தருவது சரி

வெற்றிவேல் சொன்னது…

புது விளக்கம் தான்....

சூனிய விகடன் சொன்னது…

அணு உலையை எல்லாம் மூடி வச்சுட்டு அடுக்களைக்குள் நுழைஞ்சுட்டுதே தம்பி ....பரவால்ல தம்பிக்கு இப்போதான் புத்தி தெளிஞ்சிருக்கு

சூனிய விகடன் சொன்னது…

அணு உலையை எல்லாம் மூடி வச்சுட்டு அடுக்களைக்குள் நுழைஞ்சுட்டுதே தம்பி ....பரவால்ல தம்பிக்கு இப்போதான் புத்தி தெளிஞ்சிருக்கு

கூடல் பாலா சொன்னது…

@சூனிய விகடன் அடேய்....நீ இன்னும் சாகலையா....

சூனிய விகடன் சொன்னது…

உங்களைப் போல சமூக ஆர்வலர் எல்லாம் இருக்கிறப்ப நாங்க எப்படிங்க முன்னாடி போறது...நீங்க தான் எப்பவும் " முன்னாடி" போகணும்...சரிதானுங்களே ?

கூடல் பாலா சொன்னது…

@சூனிய விகடன் நீ 24 மணி நேரமும் பீடி குடிச்சிகிட்டே புலனாய்வு செய்றவனாச்சே ...ரொம்ப நாளா காணலையே ...செத்திருப்பியோன்னு நெனச்சேன்.....