26 ஏப்ரல் 2011

10 ம் வகுப்பு சமச்சீர் பாடபுத்தகங்கள் இலவச டவுன்லோடு

10 ம் வகுப்பிற்கான சமச்சீர் பாடபுத்தகங்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே pallikalvi.in இணைய தளத்தில் அரசு வெளியிட்டுள்ளது .இங்கே click செய்து பள்ளிகல்வி இணையதளத்திற்குள் செல்லவும் .அதில் தேவையான பாடப்புத்தகத்தின் மீது click செய்தால் rapidshare என்ற தளத்திற்குள் கொண்டு செல்லும் rapidshare தளம் திறந்ததும் இணையபக்கத்தில் slow download என்பதை தேர்ந்தெடுக்கவும் .60 நொடிகள் காத்திருப்புக்கு பிறகு download செய்வதற்கான link கிடைக்கும் .பின்பு அதை கிளிக் செய்தவுடன் புத்தகம் டவுன்லோட் ஆக தொடங்கிவிடும் .file ன் அளவு மிகவும் அதிகமாக உள்ளது. டவுன்லோடு பண்ணுரதோடு போயிடாம ஓட்டு போட்டுட்டு போனீங்கன்னா நிறையபேருக்கு பயன்படும் .

25 ஏப்ரல் 2011

புகுஷிமா அணு உலை: சமீபத்தில் மிக அருகிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ .

ஜப்பானில் நிகழ்ந்த சுனாமி தாக்குதலால் புகுஷிமாவிலுள்ள அணு உலைகள் சின்னாபின்னமாக வெடித்து சிதறின .மிக அதிக அளவில் அவை கதிரியக்கத்தை வெளியிட்டு வருகின்றன .ஜப்பான் விமானப்படையில் உள்ள ஆளில்லாத சிறியரக விமானம் மூலம் சேதமடைந்த அணு உலைகளுக்கு மிக அருகிலிருந்து சமீபத்தில் எடுக்கப்பட்ட காணொளி .

விண்டோஸ் XP: சிஸ்டம் ரீஸ்டோர் மூலம் கணினிகளின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு !

நல்ல முறையில் இயங்கிக்கொண்டிருக்கும் கணினி திடீரென்று வைரஸ் மூலமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ பழுதடைந்துவிட்டால்  உடனடியாக நாம் பின்பற்ற வேண்டியது  விண்டோஸ் நமக்கு கொடுத்திருக்கும் ஓர் எளிய வழி SYSTEM RESTORE.

இதை நாம் செயல் படுத்துவதற்கு முன்பாக system restore என்றால் என்ன என்பதை அறியவேண்டும் .

system restore என்பது நமது கணினி பழுதடைவதற்க்கு முன்பு என்ன நிலையில் இருந்ததோ அந்த நிலைக்கு நமது கணிணியினுடைய settings களை மாற்றி அமைப்பது ஆகும் .

உதாரணமாக இன்று பத்தாம் தேதி என்று வைத்து கொள்ளுவோம் நேற்று முதல் கணினி சரியாக இயங்கவில்லை அப்படியானால் எட்டாம் தேதி அல்லது அதற்கு முன்பிருந்த நிலைக்கு நமது கணினியை கொண்டு செல்ல வேண்டும் .

system restore செய்ய கணினியை safe mode ல் on செய்ய வேண்டும் .safe mode ல் on செய்ய  கணினியை  on செய்தவுடன் F8 கீயை அழுத்தவேண்டும் .உடனே இப்படி ஒரு தோற்றம் வரும்

இதில் safe mode என்பதை தேர்ந்தெடுத்து enter பட்டனை அழுத்த வேண்டும்.இப்போது கணினி safe mode ல் இயங்க தொடங்கியிருக்கும் .இப்போது கீழ்க்கண்ட படத்தில் தொன்றுகிறவாறு system restore தேர்வு செய்ய வேண்டும் .

அதன் பிறகு கீழ்க்கண்டவாறுதேர்வுசெய்து next அழுத்தவேண்டும் எந்ததேதிகளுக்கு உங்கள் கணினியை restore செய்யமுடியுமோ அந்த தேதிகள் தடிமனாகதெரியும் .அதில் சமீபத்தில் உள்ள நாளை தேர்வு செய்து next அழுத்தவேண்டும் .உங்கள் கணினி அதுவாகவே restart ஆகும் .அதன் பின்னர் உங்கள் கணினியின் பிரச்சினை அநேகமாக சரி செய்யபட்டிருக்கும் .

இதில் கவனத்தில் கொள்ளவேண்டியது என்னவென்றால் நீங்கள் restore செய்யும் தேதிக்கு பின்பு  கணினியில் copy செய்த தேவையான கோப்புகளை backup எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும் .  

பயன்படுத்தி பாருங்கள் ,கருத்துக்களை கூறுங்கள். இத்தளத்தை  நண்பர்களிடம் பகிருங்கள். ஓட்டளித்தால் பலபேருக்கு இது உபயோகமாக இருக்கும் . .

23 ஏப்ரல் 2011

அணு சக்தி வேண்டவே வேண்டாம் :நோபல் அறிஞர்கள்

       சமாதானத்துக்கான நோபல் பரிசு வாங்கிய ஆர்ச் பிஷப் ட்ஸ்மாண்டு,ஜோஸ் ராமோஸ் மற்றும் பெண் நோபல் அறிஞர் ரிகோபெர்டா மேஞ்சு தும் உள்ளிட்ட 9 நோபல் அறிஞர்கள் கூட்டாக கையெழுத்திட்டு இந்தியா,சீனா உள்ளிட்ட அணு மின் நிலையங்களில் அதிக அளவு முதலீடு செய்து வரும் 31 நாடுகளுக்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர் .
             அணுகுண்டு எத்தனை ஆபத்து என்பதற்கும் அணு உலைகள் எத்தனை ஆபத்து என்பதற்கு ஜப்பானை தவிர வேறு உதாரணம் தேவையில்லை .மரபு சாரா எரி சக்திகளை கொண்டு மின்சாரம் தயாரிக்க எத்தனையோ வழிகள் உள்ளன .அவற்றுக்கு ஆகும் செலவு அணுமின் நிலையங்களை விட  அதிகம்  என்றாலும் ஆபத்து இல்லாமல் உலக மக்கள் வாழலாம் .நம்மில் யாராவது நோய்க்கான மருந்தை குறைந்த விலையில் கிடைக்கும் என்று மட்டமான கடைகளுக்கு சென்று வாங்குவோமா?அதுபோலத்தான் மனித குலத்துக்கு ஆபத்து இல்லாமல் மின்சாரம் தயாரிக்க அதிக விலை கொடுப்பதில் தப்பில்லை .
          உலகம் முழுவதும் தற்போது இயங்கி வரும் சுமார் 400 அணு உலைகளிலிருந்து பெறப்படும் மிசாரத்தின் அளவு மொத்த மின்சாரத்தில் 7% மட்டுமே .எனவே இந்த நானூறு அணு உலைகளையும் அக்கு வேறு ஆணி வேறாக பிடுங்கி எறிவதில் உலகிற்கு எந்த பெரிய இழப்பும் இல்லை .அதே நேரம் நிகழ்கால சந்ததியும் நமது வருங்கால சந்ததியும் கதிரியக்க பேராபத்திலிருந்து தப்பித்துக்கொள்ளும் .அணு உலைகளில் விபத்து நேராவிட்டாலும் கூட அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட கழிவுப்பொருட்களால் எதிர்காலத்தில் பேராபத்து உள்ளது என்பதை அனைத்து விஞ்ஞானிகளும் ஒப்புக்கொள்கின்றனர் .மனித குலத்துக்கே அச்சுறுத்தலாக விளங்கும் இந்த அணு மின் நிலையங்களை மூடி அப்புறப்படுத்திவிட்டு ஆபத்தில்லாத முறையில் அனைத்து நாடுகளும் மின் உற்பத்தி மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிஞர்கள் விடுத்துள்ள வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ளனர்  


                ஆனால் கற்பனைக்குகூட எட்டாத வகையில் கோடிகள் லாபம் சம்பாதிக்கும் அணுமின்  நிலையத்துக்கான சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்க்குமா என்பது சந்தேகமே .இந்நிறுவனங்கள் சாதாரண மக்களை மட்டுமன்றி ஒவ்வொரு நாட்டு நாடாளு மன்றங்களையே அணுவினால் ஆபத்தில்லை என்று ஆட்டி படைக்கும் வல்லமை மிகுந்தவை .இந்நிருவனங்களுக்கேல்லாம் சாதாரண மக்களின் உயிரின் அருமை தெரியாது .அவர்களின் ஒரே தாரக மந்திரம் பணம் பணம் பணம் .

22 ஏப்ரல் 2011

ஜப்பான் அணு உலை அரக்கனின் கொடூரம் :வீடியோ



ஜப்பானில் சமீபத்தில் நிகழ்ந்த சுனாமி தாக்குதலால் புகுஷிமா அணு உலைகள் கடும் சேதமடைந்து கதிரியக்கத்தை வெளியிட ஆரம்பித்தது .அதை தொடர்ந்து அணு உலையை சுற்றி 30 கிலோமீட்டருக்குள் வசித்த மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர் .இதன் காரணமாக அப்பகுதியில் வளர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான கால் நடைகள் அவற்றின் உரிமையாளர்களால் கைவிடப்பட்டன .கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டும் உணவுகிடைக்காமலும் அவை மடிந்து வரும் கோரமான காட்சி .இதை பார்த்தாவது அணு உலைக்கு ஆதரவுக்கரம் நீட்டுபவர்கள் திருந்துவார்களா ?