தமிழகத்தை பேரழிவிலிருந்து காப்பாற்றும் முயற்சியான கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி 127 பேர் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதம் இன்று 7 வது நாளை எட்டியுள்ளது .
ஒவ்வொரு நாளும் 20000 க்கும் அதிகமான தமிழ் மக்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு எங்களை ஊக்கப் படுத்தி வருகிறார்கள் .
எங்களில் பலருடைய உடல்நிலை கவலைக்கிடமாகியுள்ளபோதிலும் எப்பாடு பட்டேனும் அணு உலையை மூட வழி கிடைத்தால் மட்டுமே பட்டினிப் போரை முடிவுக்கு கொண்டு வருவதென்பதில் உறுதியாக உள்ளோம் .
எங்களின் இந்த முயற்சிக்கு பதிவுலகம் மிகப் பெரிய அளவில் ஆதரவளித்து வருவது மிகவும் உற்சாகமளித்து வருகிறது .ஆதரவளித்து வரும் சக பதிவர்கள் அனைவருக்கும் எண்ணிலடங்கா நன்றிகள் .
அலைப்பேசியில் பல பதிவர்கள் தொடர்புகொண்டு வாழ்த்தியது ஆனந்தமளித்தது .
விடமாட்டோம் போராட்டத்தை வெற்றி கிட்டும் வரை !
பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் வேறு ஊர்களிலிருந்து நடந்துவரும் மக்கள்
பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் வேறு ஊர்களிலிருந்து நடந்துவரும் மக்கள்
போராட்டத்தை ஆதரித்த புரட்சிப் புயல்
பால பிரஜாபதி அடிகளார்
வணிகர்சங்க தலைவர் வெள்ளையன்
மயக்கமடைந்தவர்


