24 பிப்ரவரி 2012

உலகின் மிகச் சிறந்த இலவச வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் Avast 7 டவுன்லோட்

சமீப காலமாக வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்களில் ஒரு சிறந்த இடத்தை பெற்று வருகிறது Avast  Antivirus  மென்பொருள் .

பணம் கொடுத்து வாங்கும் சில மென்பொருட்களை விட இம்மென்பொருளின் இலவச பதிப்பு சிறப்பாக செயல் படுகிறது .

இதன் அண்மைய பதிப்பான Version  7  தற்போது வெளியிடப்பட்டுள்ளது .தேவைப் படுவோர் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள் . 

தரவிறக்க இங்கே கிளிக் செய்யவும் .

23 பிப்ரவரி 2012

கூடங்குளம் பிரச்சனை : இன்று 12000 பேர் உண்ணாவிரதம் .

கூடங்குளம் பிரச்சனையில் மாநில அரசு அமைத்த நால்வர் நிபுணர் குழு மக்களை சந்திக்காமல் ஒருதலைப் பட்சமாக அறிக்கை வெளியிட்டதைக் கண்டித்தும் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக மூடக்கோரியும் இடிந்தகரை கிராமத்தில் 107  பேர் 72  மணி நேர தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர் .


இன்று இவ்வுண்ணாவிரதத்த்திற்கு ஆதரவாக சுமார் 12000  பேர் கலந்துகொண்டனர் .

72  மணி நேர உண்ணாவிரதத்தில் ஈடு பட்டுள்ளவர்கள் .


இன்று உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டவர்கள்

21 பிப்ரவரி 2012

அணு உலையை நிரந்தரமாக மூடு -இடிந்தகரையில் இன்று 10000 பேர் உண்ணாவிரதம் !

கூடங்குளம் அணு மின் நிலையம் மக்கள் போராட்டத்தையடுத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது .

இந்நிலையில் மாநில அரசின் வல்லுநர் குழு இரு தினங்களுக்கு முன் கூடங்குளம் வந்தது .ஆனால் மக்களை சந்திக்காமல் அணு உலையை மட்டும் சுற்றி பார்த்துவிட்டு அணு உலைக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டது .

இது கூடங்குளம் பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதன் காரணமாக நேற்று மாலை அவசரமாக அணு உலை போராட்டக்குழுவினர் ஆலோசனை நடத்தினர் .

அதன்படி தமிழக அரசின் வல்லுநர் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ,கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் நேற்று (20 -2 -2012 )நள்ளிரவு 12  மணியிலிருந்து 72  மணி நேரம் தொடர் உண்ணாவிரதம் தொடங்கப்பட்டுள்ளது .

கூடங்குளம் பகுதியைச் சார்ந்த 107  பேர் இந்த தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இவர்களுக்கு ஆதரவாக இன்று 10000  க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

உண்ணாவிரதத்தில் மாநில நிபுணர் குழு மக்களை சந்திக்க வேண்டும் எனவும் அவ்வாறு சந்திக்காமல் ஒரு தலைப் பட்சமாக ஆய்வறிக்கையை வெளியிட்டால் அதை  50000  க்கும் மேற்பட்டோர் கூடி  தீயிட்டு கொழுத்துவோம் என்று போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

20 பிப்ரவரி 2012

இடிந்தகரையில் இன்றிரவு முதல் 72 மணி நேரம் உண்ணாவிரதம் .

கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன .

இந்நிலையில் நேற்று முன் தினம் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு வந்த தமிழக அரசின் நிபுணர் குழுவினர்  மூன்று மணி நேரம் அணு உலையை பார்வையிட்டு அணு உலை பாதுகாப்பாக உள்ளது என்று கூறினர்.

கூடங்குளம் பகுதி பொதுமக்களின் கருத்தை கேட்கவேண்டும் என்று போராட்டக்குழுவினர் விடுத்த கோரிக்கையை அவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். 

இதைக் கண்டிக்கும் விதமாகவும் ,கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் இன்றிரவு 12  மணி முதல் தொடர்ந்து 72  மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக போராட்டக்குழுவினர் கூறியுள்ளனர்.

முன்னதாக இன்று காலை பொதுமக்கள் அணு உலையை முற்றுகையிடக் கூடும் என்ற நோக்கில் அணு உலைக்கு அருகில் கிட்டத்தட்ட 1000  போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் .பொதுமக்களை கைது செய்து அடைத்து வைக்க திருமண மண்டபங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன .ஆனால் இன்று அணு உலைக்கு அருகில் பொதுமக்கள் யாரும் செல்லவில்லை.

கூடங்குளம் பிரச்சினையில் தற்போது தமிழக அரசுக்கும் போராட்டக் காரர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் கூடங்குளம் போராட்டம் உச்ச கட்ட பரபரப்பை எட்டியுள்ளது .