08 ஏப்ரல் 2011

ஜப்பான் உணவுப்பொருட்களுக்கு தடை நீக்கம் !இந்தியா திடீர் முடிவு!

ஜப்பானில் அணு உலைக் கதிர்வீச்சினால் உணவுப்பொருள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று இந்தியா ஜப்பானிலிருந்து உணவுப்பண்டங்களை இறக்குமதி செய்யத் தடை விதித்திருந்தது. தற்போது திடீரென அந்தத் தடையை திரும்பபெற்றது இந்திய அரசு.

சீனா, தைவான், சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஜப்பானின் பாதிக்கப்பட்ட அணு உலை இருக்கும் பகுதிகளிலிருந்து வரும் உணவுப்பொருட்களுக்குத் தடை விதித்தது.

இதனையடுத்து இந்தியாவும் 3 மாதகால தடை விதித்திருந்தது. இப்போது "கதிர்வீசு பாதிப்பு இல்லை" என்ற சான்றிதழ் கொடுத்து இந்தியாவுக்கு உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்யலாம் என்று இந்திய வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது.

"ஒவ்வொரு வாரமும் அங்குள்ள நிலைமைகளை பரிசீலனை செய்து அதன் பிறகு முடிவு எடுக்கப்படும். தற்போது ஒட்டுமொத்த தடை தேவையில்லை" என்று வணிகத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பானில் உள்ள புகுஷிமா டாய்ச்சி அணு உலையில் சுனாமி மற்றும் பூகம்பம் காரணமாக் மின்தடை ஏற்பட்டு அணு உலை குளிரூட்டும் வசதிகள் முற்றிலும் பழுதடைந்தன. இதனால் கதிர்வீச்சு கடல் நீரிலும், ஏன் நிலத்தடி நீரிலும் கூட பாய்ந்திருப்பதாக செய்திகள் வெளியானதால் பல நாடுகள் ஜப்பானிலிருந்து உணவுப்பொருள், பழங்கள் இறக்கு மதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

கதிர்வீச்சு உணவினால் புற்று நோய் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த ஒரு நாடும் ஜப்பான் உணவுப்பொருட்களுக்கு தடையை நீக்காத நிலையில் இந்தியா மட்டும் நீக்கியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது .


                              -நன்றி வெப் துனியா.

கருத்துகள் இல்லை: