05 ஏப்ரல் 2011

ஜப்பான் பள்ளிக்கூடங்களில் கதிரியக்க ஆய்வு

      கடந்த 11-03-2011 ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் சுனாமியால் அங்குள்ள புகுஷிமா அணு உலைகள் வெடித்து சிதறியது.அணு உலைகள் சேதமடைந்து பல நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் அதை கட்டுப்படுத்தும் முயற்சியில் பின்னடைவுகளே ஏற்பட்டு வருகின்றன.அணு உலையிலிருந்த30கிலோமீட்டர்தொலைவிலுள்ளமக்கள்வெளியேற்றப்பட்டு
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர் .இருந்தாலும் 30 கி.மீ.க்கு அப்பால் வசிக்கும் மக்களிடமும் கதிரியக்கம் குறித்த கவலை ஏற்பட்டுள்ளது .அதிலும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் மழலை செல்வங்கள் குறித்து மிகுந்த கவலை அடைந்துள்ளனர் .இதன் காரணமாக ஜப்பானில் உள்ள 1400 பள்ளிகளில் கடந்த இரண்டு நாட்களாக கதிரியக்க ஆய்வுகள்நடந்து வருகின்றன .
   
      கதிரியக்க பாதிப்புகளை குறைக்கும் முயற்சிகளில் பெரும் பின்னடைவாக 7 லட்சம் மடங்கு கதிரியக்கம் மிகுந்த அணு உலைக்குள் தேங்கியிருந்த 12000 டன் நீர் கடலில் திறந்து விடப்பட்டுள்ளது .வேறு வழி இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்க நேர்ந்ததாக ஜப்பான் அரசின் உயரதிகாரி யூகியோ எடானோ தெரிவித்துள்ளார்.இந்த ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளமைக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .இதன் மூலமாக அடுத்த சில நாட்களில் மக்கள் வெளியேற்றம் மேலும் பல தூரத்திற்கு அதிகரிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது .

        இதனிடையே நிவாரண முகாம்களுக்கும் மருத்துவ மனைகளுக்கும் புதிதாக வருபவர்கள் தங்கள் உடலில் கதிரியக்கம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதால் மக்கள் பெரிதும் கலக்கமடைந்துள்ளனர்.திக்கற்றவர்களுக்கு தெய்வம்தானே துணை .நல்ல மனம் கொண்ட ஜப்பான் மக்கள் அனைவரும் துயரங்களிலிருந்து உடனே விடுபட இறைவனை பிரார்த்திப்போம்.


கருத்துகள் இல்லை: