22 ஏப்ரல் 2011

ஜப்பான் : தாய்ப்பால் விஷமானது !

        நமது எதிரிகளுக்குகூட இப்படி ஒரு     சோதனை வரக்கூடாது என்றுமிகவும்துன்பமான வேளைகளில் நாம் நினைப்பதுண்டு .அப்படி ஒருமோசமான துன்பநிலை ஜப்பான் நாட்டில் நிகழ்ந்துள்ளது .

ஜப்பானில் கடந்த 11 -03 -2011  அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் அங்குள்ள புகுஷிமா அணு உலைகள் மிக மோசமாக சேதமடைந்தன .அதன் காரணமாக அணு உலையில் இருந்து கதிரியக்கம் வெளியேறத் தொடங்கியது .அதன் காரணமாக புகுஷிமா மட்டுமன்றி 200 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் டோக்யோ நகரத்திலுள்ள உணவு பொருட்களிலும் கதிரியக்கம் கண்டறியப்பட்டது .

அதை தொடர்ந்து ஜப்பானில் இருந்து உணவுப்பொருட்களை இறக்குமதி செய்ய பல்வேறுநாடுகளும் தடை விதித்துள்ளன .சில நாட்களுக்கு முன் ஜப்பான் கடலில் பிடிக்கப்பட்ட மீன்களை பரிசோதித்த போது அவற்றில் கதிரியக்கம் இருப்பதுகண்டறியப்பட்டது .அதன் காரணமாக யாரும் கடலில் இருந்து கிடைக்கும் உணவுகளை சாப்பிடவேண்டாம் என மக்களை அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டது .

தற்போது சோதனை மேல் சோதனையாக  டோக்யோ நகரத்தின் அருகில் வசிக்கும் சில தாய் மார்களின் தாய்ப்பாலில் நேற்று கதிரியக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது .இது அங்குள்ள மக்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

இதனிடையே புகுஷிமா அணு உலையிலிருந்து 20  கிலோ மீட்டருக்குள் எந்த ஒரு நபரும் நுழையஅந்நாட்டு அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக தடை விதித்தது .

1986 ல் செர்னோபிலில் நிகழ்ந்த அணு விபத்தின் போதும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன .அதனை தொடர்ந்து பல்வேறு நாடுகள் அணு உலைகளின் தீமையை உணர்ந்து தங்கள் நாட்டிலுள்ள அணு உலைகளை மூடின .

கடந்த 20  ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க வகையில் எந்த ஒரு அணு விபத்தும் நிகழாததால் சில நாடுகள்புதிதாக அணு உலைகளை கட்ட திட்டமிட்டிருந்தன .தற்போது ஜப்பானில் நிகழ்துள்ள துயரங்களை அடுத்து அமெரிக்கா, சீனா,இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் அணு உலை அமைக்கும் திட்டத்தை கை விட்டுள்ளன .

கருத்துகள் இல்லை: