12 ஜூலை 2011

சேனல் 4 வீடியோ : நிருபமா சொல்வது நியாயமா ?

இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்கள் தொடர்பான காணொளிகளை சேனல் 4 ஒளிபரப்பியதன்மூலம் இலங்கை அரசின் முகத்திரை கிழிந்தது .

அதனைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளும் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன .இருந்தபோதிலும் இந்திய ஊடகங்கள் இது பற்றி அமைதி காத்து வந்தன .

இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்தியா டுடே செய்தி நிறுவனத்தின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி சேனல் 4 வீடியோக்களை அடிக்கடி ஒளிபரப்பி வருகின்றது .இது தற்போது டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது .

இது குறித்து கருத்து தெரிவித்த பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நட்டா இலங்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் இந்திய அரசு இலங்கை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கருத்து தெரிவித்தார் .

இந்த வீடியோ குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவிடம்  செய்தியாளர்கள் கேட்டபோது இது பற்றி இப்போதைக்கு கருத்து எதுவும் தெரிவிக்க இயலாது என்று கூறியுள்ளார் .

இலங்கையில் போர்குற்றம் நடந்தபோதோ அதை சேனல் 4  ஒளிபரப்பியபோதோ வாய் திறக்காத காங்கிரஸ் அரசு தற்போது அதை நேரடியாக காண்கின்ற போதும் வாய்திறக்க மறுப்பது கண்டனத்திற்குரியது .


இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா கருத்து தெரிவிக்கையில் காங்கிரஸ் அரசின் இச்செயல் கண்டிக்கத்தக்கது எனவும் இதன் மூலம் ஐ நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராகும் தகுதியை இந்தியா இழந்துவிட்டது எனவும் கூறினார் .

8 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இலங்கையில் போர்குற்றம் நடந்தபோதோ அதை சேனல் 4 ஒளிபரப்பியபோதோ வாய் திறக்காத காங்கிரஸ் அரசு தற்போது அதை நேரடியாக காண்கின்ற போதும் வாய்திறக்க மறுப்பது கண்டனத்திற்குரியது

உணவு உலகம் சொன்னது…

Present sir.

A.R.ராஜகோபாலன் சொன்னது…

காங்கிரஸ் அரசு தமிழர்கள் உணர்வுகளை பற்றீ கவலை படுவதாகவே தெரியவில்லை, கொடுமையிலும் கொடுமை இந்த அரசு

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

எல்லாம் கண்துடைப்பு சந்திப்புகள்...

பெயரில்லா சொன்னது…

எப்பிடி பாஸ் காங்கிரஸ் வாய் திறக்கும்.. அவர்களுக்கும் பங்கு இருக்கே ....

சக்தி கல்வி மையம் சொன்னது…

கண்டனத்துக்குரியது,,

Unknown சொன்னது…

இவனுக திருந்தமாட்டாங்க சார்!!!

எஸ் சக்திவேல் சொன்னது…

கேள்வி:

"அந்தப் பேர்வழி தூத்தேறி" என்று கருத்துரையிட்டால் "தணிக்கை" செய்துவிடுவீர்களா?